புதுமைப்பித்தனும் ஆங்கிலமும்

ஜெயமோகன் தில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசியதை சில பல மூடர்கள் கிண்டல் செய்திருப்பதாக அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். அராத்துவின் பதிவையே இங்கே பகிர்ந்திருப்பேன். ஆனால் அவருடைய தமிழ் எனக்கு ஒவ்வாதது என்பதால் அதை நான் இங்கே பகிர முடியவில்லை. அவர் எழுதியிருப்பதைச் செப்பனிடுவதும் அத்துமீறல் என்ற பிரிவில் வந்து விடும். தமிழ் எழுத்தாளர்களில் இன்று சர்வதேச அளவில் பெயர் தெரிந்திருப்பவர்கள் நான்கைந்து பேர்தான். இவர்களில் சல்மாவும், பெருமாள் முருகனும் … Read more

தேர்தல் கணிப்பு

கேள்வி: மதிப்புக்குரிய சாரு அவர்களுக்கு. 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த உங்களின் கணிப்பு இன்னும் வரவில்லையே? பதில்: நான் முழுக்க முழுக்க பொது வாழ்விலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் விலகி ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இப்போதைக்கு இதுவரை தொகுக்கப்படாமல் இருந்த  புத்தகங்களை வாசகர்களுக்கு ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் கொண்டு செல்வதிலும், பாதி எழுதி முடித்த நிலையில் கிடக்கும் நாவல்களை முடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.  இதுவரை நண்பர் ஸ்ரீராம் நாற்பது புத்தகங்களைத் தொகுத்துக் … Read more

வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு பகுதி

நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற விரைவில் வெளிவர இருக்கும் என் சிறுகதைத் தொகுதியிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்டவை. இனி கதை: “என்ன பிரச்சினைன்னு என் கிட்ட சொல்லப்டாதா?   பர்த்தாவுக்கு ஒரு பிரச்சினைன்னா பாரியாள் கவலைப்பட மாட்டாளா?  சமீப காலத்துல நீங்கொ இப்டி பிரண்டு பிரண்டு படுத்தது இல்லியேன்னு ஒரு அக்கறையில கேட்டேன்.” ”எல்லாம் உங்க அண்ணாவினால வந்தது.  அவன்ட்ட ஹாய் … Read more

சில புதிய நூல்கள்

மயன் மாளிகை கட்டுரைத் தொகுப்பு வெளி வந்து விட்டது. அமேஸானிலும் கிடைக்கிறது. ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற நாவல் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடும். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முன்பதிவு செய்யப்படும். அடுத்து, கல்ச்சர் வல்ச்சர் என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பை செப்பனிட்டுக் கொடுத்து விட்டேன். அது இன்னும் இரண்டு வாரத்தில் வரலாம். அடுத்து, தற்சமயம் நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற சிறுகதைத் தொகுதியை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். கூடவே, கோடம்பாக்கம் என்ற சினிமா கட்டுரைகளின் … Read more

அத்தனை எளிதில்லாத அமைதி

ஐந்து நாட்கள்அந்த ஐம்பது வயதுநண்பனோடு தங்கினேன்காலையில் எழுந்து வருவான்தாகமெடுத்தவன் போல்மடக் மடக்கென்றுமதுவை அருந்துவான்எந்த வகை என்பதுமுக்கியமில்லைரம்மோ விஸ்கியோ பிராந்தியோஎதுவாக இருந்தாலும் ஓகேநான் வைன் மட்டுமேஅருந்துபவனென்பதால்அவனது பட்டியலில்வைனும் சேர்ந்து கொண்டதுகூடவே கொஞ்சம் கூழோகஞ்சியோ உண்டுபிறகுகடும் சத்தத்துடன் வாந்தியெடுத்துவிட்டுஉறங்கச் சென்று விடுவான்வாந்தியெடுக்க அவன் அருகிலேயேஒரு சிறிய வாளி உண்டுரெண்டு மூணு மணி நேரம் சென்றுமீண்டும் வருவான்தாகமெடுத்தவனைப் போலவேமடக் மடக்கென்றுமதுவை அருந்துவான்தொட்டுக்கொள்ள ஏதேனும் பழம்மிளகாய்ப்பொடி தூவிய நெல்லிக்காய்அல்லதுஎலுமிச்சைகொஞ்சமாய் ஏதேனும் உணவுமீண்டும் கடும் சத்தத்துடன்ஒரு வாந்தியெடுத்துவிட்டுஉறங்கச் சென்று விடுவான்இப்படியே இரண்டு மாதம்ஆகியிருப்பதாக அவன் … Read more