Nandini: The untold story

இன்றைய ஏஷியன் ஏஜின் அகில இந்தியப் பதிப்பில் என் கட்டுரை வந்துள்ளது. மும்பை, தில்லி பதிப்புகளில் வந்த கட்டுரை, ஏஷியன் ஏஜின் சென்னை பதிப்பான டெக்கான் க்ரானிகிளில் மட்டும் வரவில்லை. ஜல்லிக்கட்டு கட்டுரையும் இப்படித்தான் ஆனது. தில்லி அலுவலகத்தில் கேட்டால் அப்படி ஆகக் கூடாதே, விசாரிக்கிறோம் என்கிறார்கள். அகில இந்தியப் பதிப்புகளில் வந்து சென்னை பதிப்பில் இல்லை. என் எழுத்துக்கு invisible ban இருப்பதாக நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதானோ! Asian Age, 12.2.17 http://www.asianage.com/opinion/oped/120217/nandini-the-untold-story.html

மனதுக்குப் பிடித்த எழுத்து…

பிரமாதமான எழுத்து. இன்றுதான் பார்க்கிறேன். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களும் சுவாரசியமாக இருக்கின்றன. http://sundargprakash.blogspot.in/

சசிகலா x பன்னீர் செல்வம்

சசிகலா முதல்வராவதில் என்ன தப்பு? ஜெ. ஊழல் செய்யாதவரா? கருணாநிதி ஊழல் செய்யவில்லையா? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம், ஆச்சா போச்சா மூச்சா என்று கத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு என் பதில்: வெளிப்படையாகக் குற்றச் செயல்களில் ஈடுபடலாம்; யார் சொத்தை வேண்டுமானாலும் அதிகாரத்தை வைத்து மிரட்டி அபகரித்துக் கொள்ளலாம்; ஒரு முதலமைச்சரையே மருத்துவமனையில் 75 நாட்கள் சிறை வைத்து அவருடைய புகைப்படமோ விடியோவோ வெளியிலேயே வராமல் இருட்டடிப்பு செய்யலாம்; கடைசியில் அந்த முதலமைச்சரின் பிணத்தின் முகத்தை மட்டும் … Read more