Luis Fonsi

லூயிஸ் ஃபோன்ஸி. எனக்குப் பிடித்த தென்னமெரிக்கப் பாடகர். புவெர்த்தோ ரிக்கோவைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி மரியோ பர்கஸ் யோசாவின் நாவல் ஒன்றில் படித்தேன். உடனே பிடித்து விட்டேன். https://www.youtube.com/watch?v=kJQP7kiw5Fk

மனிதக் கறிக்குத் தடை இல்லை!

இதே போல் ஆட்டுக் கறி, கோழிக் கறி ஆகியவற்றையும் தடை செய்யும்படி மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பகவத் கீதை 16, 17, 18 அத்தியாயங்களில் மாமிசம் சாப்பிடுபவர்கள் மிருக இயல்போடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மனித மாண்பைக் காப்பாற்றுவதற்காகவாவது ஆடு கோழி இறைச்சிகளையும் தடை செய்யவும். ஒரே ஒரு விதிவிலக்காக, மதக் கலவரம் வரும் போது மனிதக் கறி சாப்பிட தடை இல்லை என்று அறிவித்து விட்டால் போதும்.

kaala

Is my friend @Pa.Ranjith losing a potential filmmaker in him, being trapped in Rajinikanth madness? And this whole lot of discussion on identity politics around Rajini who is an overtly RSS guy is so fake and nonsensical!!! His entire family is “Modi”fied. And this Rajinkanth hasnt done anything useful than looting people’s money selling 100 … Read more

பிரிவு

இந்த 64 வயது வரை எந்த இழப்புக்காகவும் வருத்தப்பட்டதில்லை. எந்தப் பிரிவும் என்னைப் பாதித்ததில்லை. உயிருக்கு உயிராக இருந்த உறவுகள் நட்புகள் பிரிந்தன. ஒரு துளியும் கலங்கவில்லை. இரண்டு முறை என் உயிரே பிரிந்து விடுவேன் என பயமுறுத்தியது. கவலையே படவில்லை. எதுவுமே என்னை அசைத்ததில்லை. ஆனால் இன்று காலையிலிருந்து ஒரு விஷயம் என்னைப் பிழிந்து கொண்டிருக்கிறது. துயரம் என்ற உணர்வையே அனுபவித்தறியாததால் இதுதான் துயரமா என்றும் தெரியவில்லை. இருக்கலாம். இதுதான் துயரமாக இருக்கும். இந்த ஒரு … Read more

இலக்கியத் தரகர்கள்

ஷோபா சக்தி முகநூலில்: நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாருநிவேதிதாவுக்கு 44 வயது. கண்ட நாள் முதல் நெருக்கமாகிவிட்டோம். அப்போதெல்லாம் சாரு எனக்கு நீளமாகக் கடிதங்கள் எழுதுவார். என் மகனைப் போல நீயிருக்கிறாய், என்னை இருபது வருடத்திற்கு முன்பு பார்த்ததுபோலவே இருக்கிறாய் என்று கடிதத்திலும் ‘சிறுகதையில் ஷோபாவை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்று பத்திரிகைகளிலும் எழுதுவார். “கொரில்லா“ இனவாத நாவல், தகவல் தொகுப்பு எனச் சாடினாலும் மற்றப்படிக்கு பல்வாறு என் கதைகளை புகழ்ந்திருக்கிறார்.. எனது கடைசிக் … Read more

என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தி

இதுவரையிலான என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தியாக இதைக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதை எழுதியவர் கார்ல் மார்க்ஸ். நேற்றைய இரவு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் இறந்துபோயிருக்கிரார்கள். ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களில் எட்டு வயது சிறுமியும் உண்டு என்று ‘கண்ணியமான’ பத்திரிகைகள் அழுத்தி உச்சரிக்கின்றன. ‘நான் உடைந்து போய்விட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்த இசை நிகழ்ச்சியின் பாடகர் Grande. உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நமது … Read more