அடியேனைப் பற்றி…

என்னைப் பற்றி என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்? என் எழுத்து பற்றி அவர்களின் அபிப்பிராயம் என்ன?  இது பற்றி அவர்கள் எழுதித் தருவதைத் தொகுக்கலாம் என்று டாக்டர் ஸ்ரீராம் ஒரு திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.  எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் என்று பலரிடமும் கேட்டிருக்கிறார்.  அவர்களும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.   இப்போது நீங்கள் பார்க்கும் எஸ்.ரா. இருக்கும் இடம் வேறு.  ரஜினியோடு திருப்பதி வெங்கடஜலபதி சந்நிதியில் எஸ்.ரா.வைப் பார்த்தேன்.  ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் மைலாப்பூரில் … Read more

எக்ஸைல் நாவலை வாசிப்பது எப்படி?

சற்று முன்பு தான் என் நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  மோடியின் பாஸிஸ உத்தரவுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  என்னைப் போலவே அவருக்கும் பசு தெய்வம்.  பசுவையோ காளையையோ கொல்வதை கற்பனையில் கூட நினைக்க முடியாத மெல்லிதயம் கொண்டவர்கள் நாங்கள்.  பசுவும் காளையும் எங்களுக்கு எங்கள் அம்மா மாதிரி.  அம்மாவை யாராவது கொன்று தின்ன முடியுமா என்றெல்லாம் நாங்கள் கேட்பதுண்டு.  ஆனால் எங்களுக்குத்தான் அம்மா.  மற்ற பலருக்கு அது உணவு.  அப்படியிருக்கும் போது என் நம்பிக்கையை அவர்கள் … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 28

ஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிக் கொன்றது. இப்போது போரின் முறை மாறியிருக்கிறது அல்லவா? எனவே, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதுதான் இப்போதைய போர்முறை. மோடியின் பண உபயோகத்தைக் குறைத்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். பணக்காரர்கள் அதனால் ஒருசிறிதும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணம் சென்னையிலிருந்து தில்லிக்குப் போயிருக்காது. அதேபோல், இப்பொதைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதும் தலித் மக்களும் முஸ்லீம்களும்தான். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/05/29/1495996204

the discreet hero

mario vargas llosa எழுதிய the discreet hero என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மை காட். ஒரு ஆள் எப்படி வாழ்நாள் பூராவும் சுவாரசியமாகவே எழுதிக் கொண்டிருப்பான். தமிழில் சுஜாதாவின் எழுத்து தான் சுவாரசியத்துக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும். ஆனால் யோசா சுஜாதாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என்று தோன்றுகிறது. நாவலில் வரும் 80 வயது இஸ்மாயில் தன் நண்பன் ரிகபர்த்தோவிடம் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நீ தான் சாட்சிக் கையெழுத்துப் போட … Read more

கார்த்திக் – அனு திருமணம்

மும்பையில் நடந்த கார்த்திக் – அனு திருமணத்துக்கு நேரில் வந்திருந்த அருணாசலம், உயிரெழுத்து செந்தில், ராமசுப்ரமணியன், காயத்ரி, ராம்ஜி, ஆனந்த், சத்யமூர்த்தி, அவந்திகாவின் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.  சென்னை வரவேற்பு பற்றி எழுத வேண்டும்.