பூச்சி 72

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியை நேற்று அனுப்பியிருந்தார்.  ”நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.” ஹலோ சொல்ல ஒரு மனிதனுக்கு என்ன தகுதி வேண்டும் Mr. Charu? பாரதி மகாத்மாவை சந்தித்த அத்தியாயத்தைப் படித்தாலே இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கேள்வியில் இருந்த மிஸ்டர் என்ற வார்த்தை எனக்கு அவமரியாதை போல் பட்டதால் எதுவும் பதில் எழுதவில்லை.   வெறுமனே சாரு என்று எழுதினால் எனக்கு அப்படித் தோன்றியிருக்காது.  தொண்ணூறு … Read more

பூச்சி – 71

71 சமீபத்தில் எழுதியிருந்தேன் அல்லவா, சினிமா உலகில் போய் என்னால் குப்பை கொட்ட முடியாது என்று?  அங்கே போனால் கொஞ்சமாவது ஜால்ரா அடிக்க வேண்டும்.  நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.  அது நம்மால் முடியாது என்று எழுதியிருந்தேன்.  அதை எழுதிவிட்டுப் படுத்த போது என் கனவில் பாரதி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சி வந்தது.  இங்கே சென்னையில் கதீட்ரல் சாலையில் ராஜாஜியின் பங்களாவில் காந்தி தங்கியிருந்தபோது.  அந்தச் சந்திப்பு பற்றி வ.ரா. … Read more

பூச்சி 70

நேற்றைய அத்தியாயத்திலேயே வந்திருக்க வேண்டியது.  விடுபட்டு விட்டது.  மக்களுக்கு – அதாவது பொதுஜனத்துக்கு எப்போதுமே வழிபாட்டுக்குரிய ஒரு பிம்பம் – icon – தேவைப்படுகிறது.  அந்தந்த காலகட்டத்துக்கேற்ப அந்த பிம்பம் வழிபாட்டுக்குத் தகுதி உடையதாகவோ அல்லது வெறும் அட்டைக் கத்தியாகவோ இருக்கிறது.  முன்னதுக்கு காந்தியையும் பின்னதுக்கு அப்துல் கலாமையும் நீங்கள் உதாரணமாகக் கொள்ளலாம்.  கலாம் சமீபத்திய உதாரணம்.  இந்தியாவில் உள்ள மாணவர்கள் கலாமைத் தங்கள் வழிபாட்டு பிம்பமாகக் கொண்டாடினார்கள்.  புரிகிறது.  ஆனால் லட்சோபலட்சம் ஆட்டோக்காரர்கள் ஏன் இயேசு … Read more

பூச்சி 69

அன்புள்ள சாரு அப்பாவிற்கு,  என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை என் இலக்கியத் தந்தையாகக் கருதுகிறேன். இன்று என் கண்களில் வழிந்தோடும் வலிமிகுந்த கண்ணீர் உங்களுக்காக. அழைத்துப் பேசி விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்த மனம் வரவில்லை. விஷயத்திற்கு வருகிறேன். முரகாமியின் தீவிர வாசகன் நான். நீங்கள் தேடிப் பார்த்தாலும் அவருடைய ஒரே ஒரு நேர்காணல்தான் youtubeஇல் கிடைக்கும். தேடினாலும் அதிகம் தகவல் கிடைக்காத … Read more

பூச்சி 68

ராம்ஜிக்கும் காயத்ரிக்கும்.  பூச்சி தொடரை புத்தகமாக வெளியிடும்போது 68-இல் எதுவும் எழுதாமல் கொடுத்திருந்த புகைப்படத்தை அட்டையில் போடலாம் என்பது என் ஆலோசனை.  ஒரு பெண்ணின் தலைச்சுமையோடு நாயும் சேர்ந்து செல்லும் புகைப்படம். நேற்று விகடனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.  160 சொச்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய குறிப்பு அது.  விகடனைப் புறக்கணிக்க வேண்டும்; விகடனில் இனி நான் எழுத மாட்டேன் என்பது போன்ற வீரப்பிரகடனங்களைக் கொண்ட குறிப்பு.  பின்னர் அராத்து மற்றும் … Read more

ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி : கதை வாசிப்பு: வித்யா சுபாஷ்

மேற்கண்ட கதையை தில்லியில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அதன் விளைவாக தில்லியில் 3000 சீக்கியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து எழுதினேன்.  அந்த சீக்கியப் படுகொலைகளில் திர்லோக்புரி என்ற பகுதியில் மட்டும் 2000 சீக்கிய ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  அந்தக் கொலைகள் நடந்த ப்ளாக்குக்கு எதிர்சாரியில்தான் நான் வசித்தேன்.  அதனால் அதை நான் பார்க்க நேர்ந்தது.  இது ஒரு நேரடி சாட்சியக் கதை.  இதை கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களாவில் எழுதிய போது குற்றாலம் … Read more