பூச்சி 80

இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் – அதிலும் குறிப்பாக கடவுளின் பெயரைச் சொல்லி, ஆன்மீகத்தின் பெயரால் உடலின் இயல்பான இச்சைகளை அடக்க மாட்டார்கள்.  உலகில் உள்ள மதங்களிலேயே உடலை அடக்கி ஒடுக்காத ஒரு மதம் எதுவென்றால், அது இஸ்லாம்தான்.  அதிலும் குறிப்பாக, விசேஷமாக பெண்கள்.  முத்துசாமியின் நீர்மை என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  அசோகமித்திரனின் இருவர் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  லா.ச.ரா.வின் பாற்கடல் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  நீர்மையில் வரும் அந்தப் பெண்மணிக்குப் பெயர் … Read more

என் கருத்தும் இதேதான்…

சட்ட நடவடிக்கை என்ற கட்டுரையில் மட்டும் ஒரு சின்ன கருத்து முரண்பாடு எனக்கு உண்டு. அதில் சென்ற ஆண்டு ஜெ. மீது வழக்குத் தொடுத்த ஒருவரைப் பற்றி மிக உயர்வான கருத்துக்களை ஜெ எழுதியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனை படித்திருந்தாலும் ஒருவர் தன்னை கடவுள் போலவும் மற்றவர்களை அடிமை போலவும் நினைத்தால், அதுவும் அவர் மார்க்சிஸ்டாக இருந்தால், அதிகாரம் கிடைத்தால் அவர் ஹிட்லரைப் போலவே மாவோ போலவோதான் மாறுவார். ஏனென்றால், படிப்பு அவரிடம் ஆயுதமாகச் … Read more

பூச்சி 79

எனக்கு ஒரு கனவு வந்தது.  ஒரு ஆள் என்னிடம் பிச்சை கேட்கிறான்.  அவனை நான் கண்டபடி அடிக்கிறேன்.  நேர்வாழ்வில் அப்படியெல்லாம் நான் வன்முறையில் ஈடுபடும் ஆள் இல்லை என்றாலும் கனவில்தான் தர்க்கம் எதுவும் இருக்காதே?  ஓ, இதைக் கூட பயமாக இருக்கிறது.   நாளை என் மீது கம்யூனிஸ்டுகளோ இந்துத்துவவாதிகளோ பெரியாரிஸ்டுகளோ பிரச்சினை கொண்டு வந்தால் இவன் கனவில் பிச்சைக்காரனை அடித்தவன், மனித விரோதி என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள்.  கனவைக் கூட வெளியே சொல்ல பயமாக இருக்கிறது.  … Read more

To You Through Me (6)

டியர் சாரு, அன்று சி.சு. செல்லப்பா உரையை லைவ்-ஆகக் கேட்க முடியாத சூழ்நிலை. உரை ஆன்லைனில் கிடைக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உரைக்கான கட்டணம் ஜி-பே வழியாக அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உரைக்கான லிங்க் அனுப்புவீர்களானால் பயனடைவேன். எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு. சி.சு. செல்லப்பாவின் தெரு இருந்த/இருக்கும் அதே தெருவில்தான் என் வீடும்.  எதிர் வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி அவர் வீடு. சின்ன வயதில் நாங்கள் எல்லாம் விளையாடுகையில் அவர் … Read more