அவதூறுக்கு எதிர்வினை (14): அ. ராமசாமி

தனது வாசிப்பு எல்லைக்குள் சாரு நிவேதிதாவின் எழுத்துகளுக்கு இடமில்லை என்று சொல்வது இலக்கிய நேர்மை . ஆனால், தமிழ் இலக்கியப் பரப்பிலேயே அவருக்கும் அவரது எழுத்து முறைமைக்கும் இடமில்லை எனச் சொல்வது எந்தவிதத்திலும் நேர்மை சார்ந்ததல்ல. தான் நம்பும் கருத்தியலும் வெளிப்பாட்டு முறைமையும் மட்டுமே சரியானது; மற்றவையெல்லாம் விலக்கப்பட வேண்டியன என நினைக்கும் ஒதுக்கல் மனோபாவம். எதை எழுதுவது எனத் தெரிவுசெய்து முன்வைப்பதிலும், உலகக் கலை இலக்கியப்பரப்பில் – சினிமா, நாடகம், இலக்கியம் – அவருக்குக் கிடைத்த … Read more

அவதூறுக்கு எதிர்வினை (13): சுகன் பாரிஸ்

தமிழில் நம்காலத்தின் நுண்ணுணர்வுள்ள இலக்கிய ஆளுமை. பொதுபுத்திகளைச் சமரசம் செய்து எழுதவும் வாசக விருப்பத்தை கணித்து அளவை போட்டு இரண்டு கூடப்போட்டு தள்ளிவிடும் எழுத்துக் கோயம்பேடுகளுக்கு மத்தியில் தன்னுணர்வை நிறுவுவது கடினம். உங்களுக்குப் பிடித்த பிரான்ஸிற்கு வந்துவிடுங்கள் , உந்த நிலம் உங்கள் மன நிலைக்குச் சரிவராது ,என பலதடவை சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளப்போகிறீர்களோ தெரியாது.நாகூர் ஆண்டவர் உங்களுக்கு தற்போதைய நிலையில் மன அமைதியை அளிக்கட்டும். *** வினவு காரரைப்போல் இலக்கியத்தை மூடத்தனத்துடன் அணுகுவதற்கு … Read more

டியர் ரமேஷ்…

சென்ற பதிவில் ஒரே ஒரு விஷயம் எழுத மறந்து போனேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போகிற வருகிற நாதாரிக் கும்பலெல்லாம் நீங்களும் உங்கள் பழைய சகாவும் கொடுத்த காலச்சுவடு பேட்டியைக் குறிப்பிட்டு என் மீது காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள். அவுங்க எழுதிக் குடுத்த நாவல்தானேயா ஸீரோ டிகிரி? என்று. முறைத்தால், நீ மறுத்தியா என்பார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பிரபலம் அப்படி என்னை முகநூலில் அவமதித்தது. இப்படியாகத்தான் நான் எழுதிய நாவலை … Read more

அவதூறுக்கு எதிர்வினை (12)

லக்ஷ்மி ரவணகுமார்: (அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை) அந்த நபருக்காக நீங்க இவ்ளோ வக்காலத்து வேண்டியதில்லை நண்பா. அவர் பதிவுல இருந்த தொனி விமர்சனம் இல்ல சாருவின் மீதான வன்மம். அதை வெளிப்படுத்த உங்களப் பயன்படுத்திக்கிட்டார் அவ்ளோதான். அவர் நல்லவர் வல்லவர்னு நீங்க சர்டிஃபிகேட் குடுக்கறதெல்லாம் நகைச்சுவை. குனிந்து திருடும்போது பின்னால் குத்தப்படுவார்னு எழுதறாரு அந்த வரிகள அந்தப் பதிவுல கமெண்ட் போட்ற மூத்த எழுத்தாளர்கள் லாம் இதுக்குத்தான் குனிஞ்சு திருடக் கூடாதுன்னு சொல்றதுன்னு எழுதறாங்க. எவ்ளோ அயோக்கியத்தனம். … Read more

வரமும் வேண்டாம், சாபமும் வேண்டாம். மன்னிப்பும் வேண்டாம், வாழ்த்தும் வேண்டாம்…

எல்லோருமே உச்சக்கட்ட படைப்பாளுமையின் வெறிக்கூச்சலோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பித்தநிலையின் உச்சம் என்றே சொல்லலாம். எவரைக் கேட்டாலும் அதேதான் சொல்லுவார். அந்த நிலையை அடையாதவன் எழுத்தாளனே இல்லை. அந்த நிலையில் எழுதுகிறேன் என்பவர் சகாயம் லஞ்சம் வாங்காமல் வாழ்கிறேன் என்று சொல்வது மாதிரிதான். யார் மீதும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. இன்று எனக்கு 68 வயது முடியப் போகிறது. இனிமேலான நாட்கள் எனக்கு போனஸ். யார் தயவிலும் வாழாமல் போய் விட வேண்டும் என்பதே என் ஆசை. … Read more

அவதூறுக்கு எதிர்வினை (11): வாஸ்தோ

விளம்பரப் பிரியை அல்லது பிரபல்ய பிம்பம் கொடுக்கும் போதை அல்லது நான் மிகவும் மேம்பட்டவனெனக் ‘காட்டி’க் கொள்ள முற்படுதல் அல்லது நான் மிகவும் தைரியமானவன் என நிறுவ நினைத்தல் எனப் பல காரணிகள் ஒன்றினைகையில் அல்லது இதில் ஏதேனுமொன்றுத் தலைத் தூக்கிப் பார்க்கையில் தன் எதிரில் இருப்பவர் யார்..? அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் பார்க்கத் தோன்றாது. உடனடியாக அவர்களைத் தாக்கி எழுத வைத்துவிடும். ஜெமோவைப் புளிச்ச மாவு என்று நக்கலடிப்பதில் துவங்கி இன்று சாருவைத் திருடனென்றும் … Read more