நான்தான் ஔரங்கசீப்…: ஓர் அறிவிப்பு

ஔரங்கசீப் நாவலுக்கு நான் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு குவிகிறது. நிச்சயமாக இந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வகைமையில் நான் இதுவரை எழுதியதில்லை. தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் எழுதினேன். எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி. அதை விட ஆச்சரியம், எல்லோரும் தினம் ஒரு அத்தியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எழுதலாம்தான். தினம் 1000 வார்த்தைகள் எழுத முடியாதா என்ன? ஆனால் பயமாக இருக்கிறது. சமயங்களில் ஆய்வுக்காக நாள் கணக்கில் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாரதத்தில் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (18): ஜ்யோவ்ராம் சுந்தர்

You are a great writer, Charu! Not a word more, not a word less. ஏற்கனவே எழுதியிருக்கேன். எனக்குப் பல மேலை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது சாருதான். லவ் யூ தல! கவன ஈர்ப்பிற்காகச் சில சில்வண்டுகள் துடிக்கவே செய்யும். ஆனால், உங்க சாதனை! மறுபடி, லவ் யூ சாரு! நீங்க என்னோட முக்கியமான ஆசிரியர். எப்போதும் என் மரியாதைக்குரியவர்.

ஔரங்கசீப்: ஓர் இனிய மதிப்புரை

என்னுடைய எத்தனையோ புத்தகங்களுக்கு குட்டி குட்டியாக எத்தனையோ விதமான மதிப்புரைகள் வந்துள்ளன. எல்லாவற்றிலும் இனிமையானது இது. பெயர் வெளியிட விரும்பாத வாசகி எழுதியது: I am loving every bit of Aurangzeb …. if u were in real now i would want to hug u and kiss ui have no words to express the pleasure of reading ur writing… எவ்வளவு பெரிய பெரிய விஷயத்தையும் … Read more

(17) வேறோர் இனிய சப்ஜெக்ட் பற்றிப் பேசுவோம்…

பின்வரும் கடிதம் லொயோலா கல்லூரி மாணவன் அர்ஜுன் மோகன் எழுதியது. முன்பெல்லாம் இது போன்ற கடிதங்களை நானே தமிழில் மொழிபெயர்த்துப் போட்டு விடுவேன். இப்போது ஔரங்கசீப் அழைக்கிறார். அதனால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறேன். பொறுமையாகப் படியுங்கள். உள்ளே செம மேட்டர் இருக்கிறது. Dear Charu ,I got to know about the recent happenings and three very distinct imageries find me. 1)Wolfgang Von Goethe once remarked that ” He who … Read more

அவதூறுக்கு எதிர்வினை (16): லக்ஷ்மி சரவணகுமார்

தன்னை அறிவாளி என்று நம்பிக்கொள்வது ஒருவிதமான மனநோய், இந்த மனநோய் முற்றத் துவங்கும்போதுதான் ஒருவன் மற்றவர்களை சிறுமைப்படுத்தத் துவங்குகிறான். இலக்கியம் யாருடைய அப்பன் வீட்டு சொத்துமல்ல, குடும்பத்திலும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் வெளிப்படுத்தும் அதிகார தொனியை விமர்சன அளவுகோலாக வைத்துக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சாதிய அதிகாரத்தின் இன்னொரு வடிவம்தான். ஒருவரின் எழுத்தோடு முற்றாக உடன்படமாட்டேன் என்று சொல்ல எவருக்கும் உரிமையுண்டு, ஆனால் ஒருவரை திருடன் பிச்சைக்காரன் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த சாதிய மனோபாவத்தின் மனநோய். சாரு நிவேதிதாவைத்தானே அந்த … Read more

அவதூறுக்கு எதிர்வினை (15): லதா ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் சாரு குறித்த உங்கள் அவதூறுப் பதிவு கண்டனத்திற்குரியது. திரு. மிஷ்கின் அப்படிப் பேசியிருந்தால் அதுவும், திரு. சாருவை இலக்கியவாதியாக அடையாளங்காட்ட அவருடைய எழுத்துகள் இருக்கின்றன. உங்களுக்கு?