வித்யாவின் குரலில் சாதனாவின் கதை
(113) பாவ மன்னிப்பு – சாதனா சகாதேவன் – Paava Mannipu – Sathana Sagadevan – Short Story – YouTube
(113) பாவ மன்னிப்பு – சாதனா சகாதேவன் – Paava Mannipu – Sathana Sagadevan – Short Story – YouTube
’கமலுக்குக் கிசுகிசு, எனக்கு அறிவுரையா?’ என்ற உங்கள் கடிதத்தைப் படித்த பிறகு என்னால் இந்தக் குறிப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. எனக்கு உங்களைக் கடந்த பதினோரு ஆண்டுகளாகத் தெரியும். பதினோரு ஆண்டுகளாகவே எனக்கு அந்த ஆச்சரியம் உண்டு, அதை உங்களிடமே கூட நான் பலமுறை பலமுறை கேட்டிருக்கிறேன், எப்படி நீங்கள் வயதே ஆகாமல் இருக்கிறீர்கள் என்று. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தலைமுடிக்கு வண்ணம் அடிப்பதை விட்ட பிறகுதான் நீங்கள் முன்னை விட இன்னும் இளமையாகவும் அதிக … Read more
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சாரு சார், வணக்கம். இன்று ‘அருஞ்சொல்’ வெளியானது. கடுமையான வேலை நெருக்கடி என்பதால், இணைப்பை உடனடியாக அனுப்பி வைக்க இயலவில்லை. இதுவே இணைப்பு: அருஞ்சொல் | News & Views Daily (arunchol.com) நீங்கள் முழுமையாக ஒரு ஓட்டம் வாசித்து விட்டு, வெளிப்படையான விமர்சனங்களை எனக்குச் சொல்ல வேண்டும். நல்லபடி வந்திருப்பதாக நினைத்தால், உங்கள் வாசகர்களுக்கும் தளத்தின் வழியே பகிர்ந்து கொள்ளுங்கள். நேற்று ஒரே நாளில் ஐந்தாறு காணொளிகள் பதிவாகின. ஒரே நாளில் … Read more
அன்பு சாரு, உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறவன் என்றாலும், உங்களுக்குக் கடிதம் எழுதியதில்லை. கோணல் பக்கங்கள் வழி நீங்கள் எனக்கு அறிமுகம். ஜீரோ டிகிரி உள்ளிட்ட உங்களின் புனைவு/அபுனைவு ஆக்கங்களை வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குறித்து எழுத வேண்டும் எனத் தோன்றியதே இல்லை. உங்கள் இலக்கிய வடிவம் தமிழின் தனித்துவமான ஒன்று என்றாலும், அவ்வடிவம் எனக்கு உவப்பானது இல்லை. தொடர்ந்து நீங்கள் தக்க வைத்திருக்கும் ’இலக்கிய இளமை’க்காகவே உங்களைத் தொடர்கிறேன். யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள … Read more
எப்போதுமே என் விருப்பத்தின் பேரில் வாழ முடியவில்லையே என்ற குறை எனக்குள் உண்டு. இப்போதும் எப்போதும் என் விருப்பம் வெளியிலிருந்து வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு எப்போதும் எழுதுவது, படிப்பது. ஆனால் பெரும்பகுதி நேரம் பூனை பராமரிப்பில் செலவாகிறது. பாண்டிச்சேரியை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒரு நண்பர் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு விஸ்தாரமான குடிசை கட்டி வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு அந்தக் காலத்துப் பேரரசர்களின் கூடாரம் போல் இருக்கும். அரவம் நெருங்காமல் இருக்க சுற்றி வர நந்தியாவட்டைச் செடிகளும் … Read more
நேற்று இதே நேரம் ஆத்மார்த்தி போனில் பேசினார். ஆத்மார்த்தி என்பதால் எடுத்தேன். இல்லாவிட்டால் இந்த நேரத்தில் போனைத் தொடுவதில்லை. உங்களுக்குப் பிடித்த நூறு பேரைப் பற்றி எழுதுங்கள் என்றார். ஆறு ஏழு பெயர்களைக் குறிப்பிட்டு முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் இல்லையா, அதன் விளைவு. அந்த நூறு பேர் பட்டியலில் முதலில் வருபவர் ஆதி சங்கரர். 1724-இல் பிறந்து 1804-இல் காலமானவர் தத்துவவாதி இம்மானுவல் காண்ட் (Immanual Kant). அவரது Critique of Pure Reason என்ற … Read more