ஆண் – பெண்

பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர்.  அதில் ஒரு இடம் வரும்.  காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி.  தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள்.  இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள்.  முழு நேரமும் கலவிதான்.  முழு நேரமும்.  அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள்.  நீ சுயமைதுனம் செய்வதுண்டா? இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு.  எந்நேரமும் … Read more

மூன்று கட்டளைகள்

என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.  அப்பா ஆசிரியர்.  சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை.  அம்மாவும் ஆசிரியை.  இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.  நடுத்தர வர்க்கம்.  என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார்.  தனியார் பள்ளி என்பது ஒரு காரணம்.  ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம்.  ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை.  … Read more

விளக்கம்: லஃபீஸ் ஷாஹீத்

இறைதூதரின் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமான ஒருவர் அலி இப்னு அபூதாலிப் (ரழி). நபிகளாரின் சிறிய தந்தையாரின் மகனான அலி (ரழி) யிற்குத் தான் நபிகள் நாயகம் தன்னுடைய மகளான பாத்திமா (ரழி) யை திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நபிகளார் இறந்த பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நான்காவது கலீஃபாவாக (ஆட்சியாளர்) பொறுப்பேற்றவர் அலி தான். மிகச்சிறந்த அறிஞரான அலி ஆத்மீகத்திலும் ஆழ்ந்து போனவர். இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற சூஃபி வழியமைப்புகளின் நிறுவனர்களில் கிட்டத்தட்ட … Read more

ஒரு சந்தேகம்

250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஃபார்ஸி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மல்ஃபூஸாத் எ நக்‌ஷ்பந்தியா என்பது அந்நூலின் பெயர். ஆசிரியர் ஷா மஹ்மூத். அவர் ஒரு சூஃபி. மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த ஃபார்ஸி அறிஞர் என்பதால் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. ஔரங்காபாதில் அடங்கியிருக்கும் பாபா முஸாஃபிர், அவரது குருவான பாபா பலங்க்போஷ் ஆகியோரின் வரலாறு. இதில் ஒரு இடத்தில் ஒரு சந்தேகம். நபிகள் நாயகம் தன் தோழரிடம் ”உலகில் நீ … Read more

பேரின்பம் எது?

ஒரு கலந்துரையாடலின் போது நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கையில் உங்களுக்குப் பேரின்பம் தரக் கூடியது எது? ஒரு நண்பர் பெண் என்றார்.  பெண்களுடன் இருப்பது, பெண்களோடு பேசுவது, பெண்களோடு பழகுவது இத்யாதி.  ராஜேஷ் (கருந்தேள்) விடியோ கேம்ஸ் என்றார்.  விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணா (விஞ்ஞானி) வாசிப்பதே பேரின்பம் என்றார்.  அதிலும் குறிப்பாக, சாருவின் எழுத்து.  கார்த்திக் (கிருஷ்ணகிரி) இசையே பேரின்பம் என்றார்.  இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுவது என்று சொல்வார் என … Read more