என் ஆசானுக்கு மரியாதை

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை சார்பாக என் ஆசானும் மதிப்புக்குரிய நண்பருமான அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. இதை நான் எனக்கே அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். எங்கள் சில்ஸிலாவில் யாருமே அப்படி அப்படியே க்ளோனிங் செய்த மாதிரி ஒருவர் சொல்வதை அடுத்தவர் ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் அன்பையும் அபிமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட புரிதலோடு வாழ்தல் என்பதுதான் இந்த சில்ஸிலாவின் பொதுத்தன்மை. … Read more

சுஷியும் வஸாபியும்…

நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ போகவில்லை.  காதர் நவாஸ் கான் ரோடு போய் விட்டேன்.  என் நண்பர் மகேஷ் முகநூல் பார்க்க மாட்டார்.  ஆனால் நேற்று ஏதோ எதேச்சையாகப் பார்த்திருக்கிறார்.  ஊரில் பெரும்பாலும் இல்லாதவர் நேற்று ஊரில் இருந்திருக்கிறார்.  எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பவர் நேற்று கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கிறார்.  நான் வரட்டுமா என்றார்.  கரும்பு தின்னக் கூலியா என்றேன்.  காதர் நவாஸ் கானில் தொஸ்கானோ என்ற இத்தாலிய உணவகம் உள்ளது. அங்கே போனோம்.  மகேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர் … Read more

கோவா நாட்குறிப்புகள் (2)

நாளைக்குள் ஔரங்கசீப் நாவலின் ஐந்து அத்தியாயங்களை அனுப்ப வேண்டும்.  இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  எழுத ஆரம்பிக்கவில்லை.  நேற்றுதான் ஜஹானாரா பேகத்தின் சுயசரிதை கிடைத்தது.  இரவுக்குள் முடித்து விடலாம் என்று பார்த்தால் ஒன்பதரைக்கே உறக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது.  படுத்து விட்டேன்.  படுத்த உடனேயே எனக்குப் பிரக்ஞை போய் விடும்.  மரணம் மாதிரிதான்.  காலை நான்கு மணிக்குத்தான் உயிர்த்தெழுதல். இத்தனை கெடுபிடியான நிலையில் இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், மனம் பூராவையும் வேறொரு எண்ணம் … Read more

தியாகராஜா

வணக்கம் சாரு சார், “நான்தான் ஔரங்கசீப்…” வாசித்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகவும் கூடவே விசித்திரமாகவும் உள்ளது. இது சாருதானா? இல்லை, உண்மையிலேயே நாவலில் உள்ளது போல் பேய் ஏதாவது பிடித்துத்தான் எழுதுகிறாரா எனத் தோன்றுகிறது. உழைத்த உழைப்பை அணுக் கூட நாவலில் தெரியப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுய சரிதம் மூலம், அவர்கள் சொல்வது போல் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கடிதம் ஔரங்கசீப் பற்றி அல்ல, அடுத்ததாக எழுதப்போகும், தியாகய்யர் பற்றியது. மோகமுள் நாவலை ஒலிச்சித்திரமாக கேட்டுக்கொண்டு இருந்த போது, … Read more

கோவா நாட்குறிப்புகள் (1)

வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர்.  தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.  எந்த பந்தாவும் கிடையாது.  கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார்.  யார் கேட்பார் இப்படி?  இப்படிக் கேட்டதால் சொல்கிறேன்.  செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர்.  பிரமாதமாகச் செய்வார்.  அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள்.  நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் … Read more