கமலை வம்புக்கிழுக்கும் ஒளரங்கசீப்: Episode 85 : நிர்மல் ம்ருன்ஸோ

இன்று வெளியான 85ஆவது அத்தியாயம் பல சுவாரஸ்யமான காட்சிகளும் , மனித வாழ்வு அபத்தத்தை நுணுக்கமாகச் சொல்கிறது. இந்த நாவலின் மூன்றாம் பகுதியில் கொக்கரக்கோ என்ற பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார். இடைவிடாத ஆவிகளின் உரையாடலுக்கு மத்தியில் இந்த கொக்கரக்கோ இருப்பது ஒரு வகையில் விறுவிறுப்பென்றாலும் நாவலின் போக்கை கலைத்து போடுகிறவனை இப்படி நாவலின் இறுதிப் பகுதியில் கொண்டு வந்திருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. புண்ணியரான தியாகராஜரைக் குறித்து ஒளரங்கசீப்பை சொல்ல வைப்பதெல்லாம் ரகளையான கற்பனை. இதெல்லாம் … Read more

சொற்கடிகை – 4

Ayn Rand என்று ஒரு எழுத்தாளர்.  ஏன் ”என்று” போட்டேன் என்றால் எனக்கு என்றுதான்.  நான் அவர் பெயரை ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனிடமிருந்து மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவர் அயான் ராண்டின் தீவிர ரசிகர்.  ஆனால் அயான் ராண்ட் ஆணா பெண்ணா என்று கூட எனக்குத் தெரியாது.  இப்போதுதான் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது கூகிளைப் பார்த்து அவர் பெண் என்று அறிகிறேன்.  ஆனால் ராண்டின் ஃபவுண்டன்ஹெட் நாவல் பற்றிப் பல ருசிகரமான தகவல்களை … Read more

சொற்கடிகை – 3

சொற்கடிகை is coming so well.. i am looking forward so much for this.. it reminds of your articles in AV. Waiting every week to read. BTW what is fascinating is how you are switching between Aurangazeb and this… rendum vera mood and writing style. You are amazing… இன்று காலை எழுந்ததும் வாட்ஸப்பில் பார்த்த செய்தி இது.  அன்னபூர்ணி … Read more

நான்தான் ஔரங்கசீப்… – ஒரு சிறிய விவகாரம்

நாலைந்து தினங்களுக்கு முன்பு அத்தியாயம் 85, 86, 87 ஆகிய மூன்றையும் பிஞ்ஜுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. பொதுவாக தமிழ் ஜனரஞ்சக இதழ்களில் பிரச்சினைக்குரிய எதையும் வெளியிட மாட்டார்கள். நான் நினைத்தது போலவே நேற்று மாலை பிஞ்ஜ் நவீனிடமிருந்து போன். கொஞ்சம் மாற்றித் தருகிறீர்களா? மாற்றித் தர இயலாது, அப்படியே அதை வெட்டி ஒட்டித் தருகிறேன் என்றேன். பிரச்சினைக்குரிய பகுதிகளில் கத்தரி போட வேண்டியதுதான். வேறென்ன? ஆனால் அந்தப் பகுதிகள் புத்தகமாக வரும் … Read more

அந்நியர்கள் : சிறுகதை: ராஜா வெங்கடேஷ்

மூன்று மணிக்கே இருட்ட ஆரம்பித்துவிட்டது. நேற்று இரவிலிருந்தே பனி விடாமல் பெய்துகொண்டிருப்பதால் தரை முழுதும் ஏழெட்டு இஞ்சுக்கும் மேலாக பனி போர்த்தியிருக்கிறது. பனி அகற்றும் வாகனம் இரண்டு முறை வந்து பனியை அகற்றிச் சென்ற பின்பும் சாலைகளில் பனி நீங்காமல் இருப்பதால் வாகனப் போக்குவரத்தும் பெரிதாக இல்லை. பெரும்பாலான நாட்களில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பதால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிசிடிவி கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது, ஆதி காலத்து POS இயந்திரத்தில் டிங் டிங் என்று அடித்து … Read more

சொற்கடிகை – 2

2. பொதுவாக நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை என் வாசகர்கள் கவனித்திருக்கலாம்.  அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணத்தைத் தவிர வேறு எந்த செய்தியும் செவிகளில் விழவில்லை.  எல்லோருக்கும் இந்த அனுபவம்தான்.  என் நண்பர்கள் யாரும் எந்த மரண செய்தியையும் எனக்கு அனுப்புவது இல்லை.   இரங்கல் கட்டுரைகள் எழுதாதற்கு ஒரே காரணம், அன்னாரைப் பற்றி நான் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பேன்.  ஆனால் சமூகமோ அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.  எப்படி எழுதுவது?  ஒரு நடிகர் இறந்தார்.  … Read more