எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை நானும்  தேடிப் போகவில்லை ஆனாலும் எப்படியோ சந்தித்துக் கொண்டோம் தாமதம்தான் சற்றுமுன் நடந்திருக்கலாம் எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான் உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன் என்றது கவிதை என்ன காயமோ என்ன மருந்தோ பசித்த ஒரு நாயின் அழுகுரல் என் அமைதியைத் துளைக்க இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன் ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய் எத்தனை நாள்  நொந்த பசி எத்தனை … Read more

சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு

சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது.  அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான்.  நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம்.  எல்லாவற்றிலுமே அப்படித்தான்.  உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும்.  மற்றபடி எல்லாம் குழம்புதான்.  கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த … Read more

இன்றைய கவிதை: கனவில் வந்த பிள்ளையார் எறும்பு

சொன்னால் நம்ப மாட்டாய்நேற்று நீயென் கனவில் வந்தாய்இதோ இப்போதென் முன்னே தோன்றுகிறாய்கனவில் வருவதற்கு முன்உன்னைப் பற்றியெனக்குஎதுவுமே தெரியாதுகேள்விப்பட்டதோடு சரிதற்செயல் நிகழ்வாயிருக்க சாத்தியமில்லைகனவில் எத்தனையோ வரும் போகும்ஒரு பிள்ளையார் எறும்பு வருமாஅப்படியே வந்தாலும் மறுநாளேநேரில் தோன்றுமாஅதை விடுநீ வெகுவேகமாய் எங்கோ செல்கிறாய்சற்றே கொஞ்சம் நின்று என்னுடன் சௌக்கியம் பேசு என்ன அதிசயம் என்றால்உன் கூட்டாளிகள் இல்லாமல் தனியாகச் செல்கிறாய் இப்போது உன்னைப் பார்க்கும்போதுஎன் வாழ்நாள் பூராவும் நீஎன்னோடு இருந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்இருந்தும் இல்லாதிருந்திருக்கிறாய்அதனாலேதான் கனவில் தோன்றினாய் உன் … Read more

ஔரங்ஸேப் 100 விழா பேருரை பற்றி நிர்மல்

அதிகாரம் குறித்தும், அதைப் புரிந்து கொள்வதிலும், அதிலிருந்து எப்படி தப்பிக்க என்பது போன்றவற்றைக் குறித்து இங்கு பேசப்படும் பல செய்திகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருப்பவர் சாரு. இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் குறித்து மிக நுணுக்கமாக, மைக்ரோ லெவலில் உள் மனதளவில் உரையாடுவது சாருவின் எழுத்துக்களில் ஒரு அங்கம்.  எல்லோரும் அதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு அரசியல் அல்லது பொருளாதார அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என எடுத்துக் கொள்வோம். சாரு … Read more

புரவி – கலை இலக்கிய மாத இதழ்

என் நண்பர்கள் கார்த்திகேயன் – அருண் இருவரும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் வாசகசாலை அமைப்பின் சார்பாக மேலும் ஒரு செயல்பாடு புரவி கலை இலக்கிய மாத இதழ். அச்சு இதழ்களெல்லாம் இணையத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் அச்சு இதழாக – அதிலும் மாத இதழாகக் கொண்டு வருவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். கார்த்திகேயனைக் கேட்ட போது தான் பார்த்து வந்த வேலையைக் கூட இதன் பொருட்டு விட்டு விட்டதாகச் சொன்னார். இவர்களைத் தமிழ் இலக்கிய வாசகர்களும் … Read more

ஒண்ணு ரெண்டு மூணு… இருபத்து மூணு

ஒண்ணு ரெண்டு மூணு என்ற பதிவின் தொடர்ச்சி இது.  இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் வாழ்வில் எப்போதும் இருந்து வரும் ஒழுங்கு இருக்காது.  உதாரணம் சொல்ல வேண்டுமானால், எப்போதும் போன் வந்தால் எடுத்து விடுவேன்.  எடுக்க முடியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் திரும்ப அழைத்து விடுவேன்.   அம்மாதிரி தினப்படி ஒழுங்கு ஒரு மாதம் இருக்காது.  ஔரங்ஸேப் நாவலை பதிப்பகத்திடம் கொடுக்க வேண்டும்.  இப்போதைய வேகத்தில் செய்தால் பதிப்பகத்திடம் கொடுக்க ஒன்றரை ஆண்டு ஆகும் என்பது எனக்கு … Read more