சாரு நிவேதிதாவின் எழுத்தும் குற்ற உணர்ச்சியும்: அராத்து

சாரு நிவேதிதா எழுத்தின் தனித்தன்மை என்ன என சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழில் அநேகமாக குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் அல்லது குற்றவுணர்ச்சியை அதிகரிக்க வைக்கும். கழிவிரக்கம் , ஏங்கி ஏங்கி நொந்து போதல் , மருகுதல் , தோல்வியை சிலாகித்தல் , கையாலாகாத்தனத்தை ஹீரோயிஸமாக்குதல் , ஏழ்மையை , ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் தாய் , மகள் போன்ற குடும்ப உறவுகளை காவியமாக்குதல் … Read more

த அவ்ட்ஸைடர் – 15 (பிஸாகுவா)

1925 ஜூன் 25 அன்று லா கொருன்யாவில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து இந்த நூறு ஆண்டுகளில் கார்லோஸ் கார்ரிதோவின் (Carlos Garrido) கதை அங்கே ஒரு புராணக் கதை போல் – நம் ஊர் மதுரை வீரன் கதை போல் ஆகி விட்டது.  ஜூன் 25 படுகொலைகள் கார்லோஸின் வன்முறைப் பேச்சினால் தூண்டப்படவில்லை என்று கருதும் மற்றொரு விவரமும் நமக்குக் கிடைக்கிறது.  தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொழிற்சாலை அதிகாரி ஒருவன் அடித்துக் கொன்று … Read more

குருவைக் கண்டடைதல்

இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தன் உடல் நலம் குறித்து அக்கறை கொள்வோர் பலரும் காலையில் நடைப் பயிற்சிதான் செய்கிறார்கள்.  அப்படி நடைப் பயிற்சி செய்தாலும் அறுபது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் வைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.  நான் உட்பட.  எனக்கு பதினாறு வயதில் காச நோய் வந்தது.  ஒரு நூற்றியிருபது ஸ்ட்ரெப்டொமைசின் ஊசி போட்டார்கள்.  சரியாயிற்று.  அதன் பிறகு ஐம்பத்தைந்து வயது வரை ஜுரம், தலைவலி, … Read more

பிறந்த நாள் வாழ்த்து

ஜிமெயிலில் உனக்கு இடம் தீர்ந்து விட்டது. இனிமேல் தேவையெனில் பணம் கட்டு. இல்லாவிட்டால் உனக்கு இனி மெயில் வராது. நீயும் மெயில் அனுப்ப முடியாது. இப்படி ஜிமெயிலிலிருந்து ஒரு வாரம் முன்பு கடிதம் வந்தது. அதனால் ஐந்த ஆண்டுகளாக வந்த கடிதங்களைப் படித்து பதில் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கடிதம் இது. படித்ததும் உற்சாகமாக இருந்ததால் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். 20 டிசம்பர் 2019 அன்று எழுதப்பட்ட கடிதம். *** சாரு நிவேதிதாவின் எழுத்துகள் அனைத்தையும் … Read more

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ்

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ் உரையாற்றுகிறார். நான் நன்றியுரை செய்கிறேன். இந்தச் சந்திப்பு தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நடைபெறுகிறது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறேன். கீழே லிங்க். https://us02web.zoom.us/j/9805204425