அன்பின் ஒளி…

இன்று என் நண்பர் ஒருவர் ஃபோனில் அழைத்தார். அவர் பற்றிய எந்தக் குறிப்பைக் கொடுத்தாலும் அவர் யார் எனக் கண்டு பிடித்து விடுவீர்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு அப்படியே விடுகிறேன். அன்பு நாவல் பாதி வந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு அது பற்றி நிறைய பேசினார். அதையெல்லாம் பதிவு செய்து வெளியிட்டாலே நாவலுக்கு நல்ல மதிப்புரையாக இருக்குமே என நினைத்தேன். இதையெல்லாம் எழுதுங்களேன் என்று லஜ்ஜையின்றி குறிப்பிட்டேன். நிச்சயம் என்றார். இந்த ஒட்டு மொத்த உரையாடலிலும் அவர் … Read more

அன்பு: பிரபு கங்காதரன்

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே….” என இறைவனை விளிக்கிறார் வள்ளல் பெருமான். அன்பு உயிர்களை இன்புற்றிருக்க செய்யவேண்டுமேயன்றி அது தீராத துன்பத்தில் தள்ளிவிடலாகாது என்பதே இப்புதினத்தின் நோக்கமாக கருதுகிறேன். அன்பாயிலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். நிற்க. என் சொந்தக்கார பெண் ஒருவர் உண்டு, ஊர் பயணம் வந்தாலும் என் பிள்ளைகளுக்கு நான் ஊற்றுகிற தோசைதான் பிடிக்கும், என் கணவருக்கு நான் வைக்கும் மீன் குழம்புதான் பிடிக்குமென்று … Read more

அன்பு: ஆயிரம் சுடர் கொண்டு ஒளி விடும் நாவல்

அன்புள்ள சாரு, அன்பே வடிவான இயேசு பிரானை கடவுளாக வரித்த ஒரு வைகிங் ராஜா அந்த அன்பினாலேயே இயேசு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டி மற்ற பேகன் வழிபாட்டாளர்களைக் கொன்று குவிக்கும் வல்ஹலா எனும் தொடரை Netflix இல்சமீபத்தில் பார்த்தேன். ரத்தம், நிணம், நெருப்பு, பேரழிவு, பல நூற்றாண்டுகளான கலாச்சாரத்தின் முழுமையான அழித்தொழிப்பு எல்லாமே அன்பே வடிவான ராச்சியத்தை உருவாக்க!அந்த ராஜாவிற்கு அன்பின்மேல் இருக்கும் அதிதீவிர அர்ப்பணிப்பு, செய்யும்அழிவுகளை அவனுக்கு மிகச்சுலபமாக நியாயப்படுத்திவிடுகிறது. ”எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்” இதைப் … Read more

ஆரோவில் சிறுகதைப் பட்டறை

இப்போது நான் 2020இல் ஆறு மாதங்களில் எழுதிய பூச்சி பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் நான்கு தொகுதிகள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இப்போதுதான் இரண்டாம் தொகுதியை முடித்தேன். இன்னும் இரண்டு தொகுதிகள். அதனால்தான் ஆரோவில் பட்டறை பற்றி எழுதவில்லை. சுமார் முப்பது பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் புதுமுகம். ஒரு நாள் முழுவதும் இருந்து விவாதித்தார்கள். எல்லோருமே மூன்று கதைகளையும் படித்து விட்டு வந்திருந்தார்கள். குடி, கொண்டாட்டம், டான்ஸ் என்று போட்ட போது நூறு பேர். இப்போது மதியம் … Read more

முராகாமியும் அடியேனும்…

பின்வரும் கடிதம் 2020 மே இறுதி வாரத்தில் எனக்கு வந்தது. இணைய தளத்திலும் வெளியிட்டேன். நீண்டதொரு பதிலும் எழுதினேன். கார்த்திக் என்ற வாசக நண்பர் எழுதியிருக்கிறார். திருமணமானவர் என்பதால் என் வாசகர் வட்டத்தில் உள்ள கார்த்திக் இல்லை என்று தெரிகிறது. இந்தக் கடிதத்தை எழுதிய கார்த்திக் என்னைத் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி charu.nivedita.india@gmail.com கார்த்திக்கின் கடிதம்: அன்புள்ள சாரு அப்பாவிற்கு, என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை … Read more

அன்பு: ஒளி முருகவேள்

நாவல் முழுவதும் அன்பினால் ஏற்படும் ரணங்கள் இருந்தாலும், பெருமாளை வலிகள் வாட்டு வாட்டென்று வாட்டினாலும் சாருவின் வசீகர எழுத்து நடையால் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை. சோகத்தைக்கூட கொண்டாட்டமாய் சொல்லும் அவரது மொழி நம்மை கட்டிப்போடுகிறது. அதுவே அவரது வாழ்வின் தத்துவமாகவும் நமக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. நான் ரசித்துப் படித்த ராஸ லீலாவிற்குப் பிறகு சாருவின் ராட்சஸ விஸ்வரூபம் இது. இதை வாசிக்கம்போது சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. சாப்ளினின் நகைச்சுவை கலந்த … Read more