அச்சத்தின் நிழலில்…

இன்றைய கவிதை
நண்பனுக்கு அனுப்பினேன்
கவிதை போகவில்லை
ஃபோனில் அழைத்தேன்

’கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
கவிதையிருந்தால் படி’ என்றான்

மனையாள் பக்கத்தில் இருந்தாள்
அவளருகில் இருந்து
என் எழுத்தைக் கடை விரிப்பது
சாலை நடுவே
முஷ்டி மைதுனம் செய்வது போல
ஆனாலும்
இன்றைய கவிதை
காதல் கவிதை அல்ல,
தத்துவக் கவிதை
அச்சம் உதறிப் படித்தேன்

’மகிழ்ச்சியின் உச்சத்திலோ
எல்லையற்ற துக்கத்திலோ
இருந்தால்தான் கவிதை
பிறக்கும்’ என்றாள்
வாழ்வில் ஒரு புத்தகமும்
படிக்திராத என் மனையாள்