மதுரை சந்திப்பு – செல்வகுமாரின் ஒரு சிறுகதை

வரும் 25, 26 தேதிகளில் மதுரையில் இருப்பேன்.  விருப்பப்படும் வாசகர்கள் எனக்கு மெயில் எழுதி விட்டு என்னை சந்திக்கலாம்.  ஆனால் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது.   என்ன பிரச்சினை என்றால், புதிதாக சந்திக்கும் நண்பர்கள் எப்போதுமே தொந்தரவு தருபவர்களாக இருக்கிறார்கள்.  சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு வாசகர் சந்திப்பு நடந்தது.  அதற்கு புதிதாக ஒரு நண்பர் வருவதாக ஆர்வம் காட்டினார்.  வயது கிட்டத்தட்ட 50 இருக்கலாம்.  ஏற்கனவே மகாபலிபுரத்தில் நடந்த வாசகர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு என்னிடம் … Read more

ஒரு விபரீதம்

சென்னை புத்தகக் கண்காட்சியை நான் ஒரு தமாஷாகவே நினைக்கிறேன்.  காரணம் என்ன என்பது பற்றி பலமுறை விளக்கி எழுதி விட்டேன்.  அங்கே கூடும் ஆயிரத்தில் ஒருத்தர் கூட இலக்கியப் புத்தகங்களை வாங்குவதாகத் தெரியவில்லை.  மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்குள் கிடக்கும் மிருகங்களைப் போல் ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்த சில எழுத்தாளர்களோடு நானும் அமர்ந்தேன் சிறிது நேரம்.  வெள்ளிக்கிழமை நடந்த வாசகர்களுடனான கலந்துரையாடல் படு சொதப்பல்.  விளம்பரமே செய்யப்படாமல் முதல் நாள் என்னைப் பலி கொடுத்தார்கள்.  எனக்கு இது … Read more

புத்தகக் கண்காட்சியில் பேசுகிறேன்…

சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 17.1.2014 அன்று )வெள்ளிக்கிழமை)  மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை ஜீவா சிற்றரங்கத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன்.  வாசகர்களும், வாசகர் வட்ட நண்பர்களும் திரளாக வந்திருந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

ஆனந்த விகடன் பேட்டி

ஆனந்த விகடனில் இன்று என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது.  என்னையும் என் பிரியத்துக்குரிய என் ஆருயிர் ஸோரோவையும் அழகான புகைப்படத்தில் காண்பித்ததற்கு விகடனுக்கு நன்றி.  பேட்டியில்  இரண்டு முக்கியமான விடுபடல்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  ஜெயலலிதா பற்றிய என் பதிலில் அவருடைய நிர்வாகம் நன்றாக உள்ளது;  ஆனால் ஊழலுக்குப் பழக்கப்பட்டு விட்ட அதிகார வர்க்கத்தையும், இலவசங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட மக்களையும் ஒற்றை மனிதரால் மாற்றுவது கடினம்.  இலவசங்களை ஒழித்தால்தான் சீர்திருத்தம் பற்றி யோசிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் … Read more