தயவு செய்து பழுப்பு நிறப் பக்கங்களை நிறுத்தி விடுங்கள்…
அப்பா, ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன், பழுப்புநிறப் பக்கங்களைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன என்று. தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கிறது என்று சொல்லிவிடுங்கள். சலிப்பூட்டும் தமிழ்ச்சூழலில் இப்படிபட்ட நூல்கள் வந்திருந்தும் படிக்காமல் போனேன் என்பது கவலையைத் தருகிறது. இந்த கவலை கவலையாக மட்டுமே தேங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எப்படியாவது நீங்கள் குறிப்பிடும் சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தே ஆக வேண்டும். மண்ணில் தெரியுது வானம் நற்றிணை பதிப்பகம் மூலமாக வரவிருப்பதாக சொன்னீர்கள்; காத்திருக்கிறேன். … Read more