ஓ காதல் கண்மணி (5)

தமிழர்கள் அத்தனை பேரும் – ஆம், அத்தனை பேரும் – சினிமா அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்கு ஓ காதல் கண்மணி படத்துக்கு நான் எழுதிய மதிப்புரைக்கு வந்துள்ள நூற்றுக் கணக்கான கடிதங்களே சாட்சி சொல்லும்.   எந்த தேசத்திலும் இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலைய மாட்டார்கள்.  பாராட்டாக இருந்தாலும் சரி, திட்டாக இருந்தாலும் சரி, எட்டுக் கோடி தமிழர்களும் ஒரு படத்தைப் பார்த்து அபிப்பிராயம் சொல்லி விடுகிறார்கள்.  அவமானம்.  எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரி நாவல் வந்துள்ளது. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : அரு. ராமநாதன் (2)

தினமணி இணைய இதழில் நான் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரைப் படித்து வருவீர்கள் என்றே நம்புகிறேன்.  சென்ற வாரம் அரு. ராமநாதன் பற்றி எழுதியிருந்தேன்.  அதன் தொடர்ச்சி சென்ற ஞாயிறு அன்று வந்திருந்தது.  அதன் இணைப்பு: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D–%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article2864654.ece

கார்னிவல்

சில மாதங்களில் தென்னமெரிக்கா செல்லக் கூடும்..  ரியோ கார்னிவல் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.  பயம் தான் காரணம்.  அவ்வளவு பெரிய மனிதப் பிரளயத்தில் சிக்கி மீண்டு வர முடியுமா?  இப்படி யோசித்தபடி தேடியதில் இந்த கார்னிவல் மாட்டியது.  இதில் கலந்து கொள்ளல்லாம் என்று தோன்றுகிறது… https://www.youtube.com/watch?v=1lzXxiBeRhI

தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து (2)

என் நண்பர் ஒருவருக்கு இந்துவில் என் கட்டுரை வந்திருக்கிறது; பாருங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  தமிழ் இந்துவா என்று பதில் மெஸேஜ்.  அதற்கு நான் அனுப்பிய பதில்:  ”கேள்வியே தப்பு; தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்னைத் தீண்டத்தகாதவனாக நினைக்கின்றன.”   ‘என்னை’ என்பதை ‘தமிழ் எழுத்தாளர்களை’ என்றும் வாசிக்கலாம்.

தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து

தினமணி.காம்-இல் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஏராளமாகப் படிக்க வேண்டியிருப்பதால் தினசரிகளைப் படிக்க நேரம் இருப்பதில்லை.  இந்த நிலையில் இன்று பத்து மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசி முடித்ததும் அவந்திகா, “யாரிடம் இவ்வளவு பவ்யமாகப் பேசுகிறாய்?” என்றாள்.  லெனின், எடிட்டர் என்றேன்.  எனக்குத் துறவிகளின் மீது எப்போதுமே ஆர்வமும் அன்பும் உண்டு.  பக்தி என்று கூட சொல்லலாம்.  லெனின் நம்மைப் போல் லௌகீக வாழ்வில் இருந்தாலும் அவர் ஒரு துறவி என்றே எனக்குள் … Read more

இலவசம், இலவசம், இலவசம்… (3)

இதைப் படிப்பதற்கு முன் இலவசம் (1), இலவசம் (2) ஆகிய கட்டுரைகளைப் படித்து விடவும்.  அப்போதுதான் தொடர்ச்சி கிடைக்கும். அதைக் கூடத் தேடிப் படிக்க முடியாதவர்கள் இதை மட்டுமே படித்து இன்புறலாம்.  பின்வருவது ஸாம் தன்னுடைய முகநூலில் எழுதியிருப்பது: ”இலவசம் இலவசம் இலவசம்” – கட்டுரையைக் குறித்து நான் முகநூலில் பகிர்ந்த விஷயத்தை கீழே இணைத்திருக்கிறேன் சாரு. என்னுடைய அன்பு மகன் ஸாமிடம் பணம் இல்லை. தமிழ் சினிமா நாயகர்கள் அத்தனை பேரையும் விஞ்சக் கூடிய அழகும் … Read more