சென்னை

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றான் சங்கக் கவிஞன்.  ஆனால் அதெல்லாம் நம்முடைய நினைவுச் சின்னங்களில் பொறித்துக் கொள்வதற்காக மட்டுமே நம்மிடம் இருக்கும் அலங்கார வார்த்தைகள்.  தங்களின் பிறந்த ஊர், வளர்ந்த ஊர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றுதலைப் பார்க்கும் போது எனக்கு அச்சமாக இருக்கிறது.  சில எழுத்தாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அந்த ஊரைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்.  தண்ணீர் வசதியே இல்லாமல் வெறும் கட்டாந்தரையும் … Read more

பேய்க் கவிதை

பழுப்பு நிறப் பக்கங்களுக்காக தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு ஆச்சரியம்.  பேய்க் கவிதை என்ற அவருடைய கதை.  எனக்கு நான் எழுதிய நேநோ என்ற கதையை நினைவூட்டியது.  அவரும் நேநோவைப் படித்திருக்க மாட்டார்.  நானும் இப்போதுதான் பேய்க் கவிதை படிக்கிறேன்.  ஜனவரி 99-இல் எழுதப் பட்டது பேய்க் கவிதை.  நேநோ 1991-இல் எழுதப்பட்டது.

படித்ததில் பிடித்தது

முகநூலில் பின்வரும் குறிப்பைக் கண்டேன்.  சரவண கார்த்திகேயன் எழுதியது. விவாக‌ரத்துக்குப் பிறகு பெண் ஜீவனாம்சம் பெற அவள் கலவியில் ஈடுபடாது இருக்க வேண்டும் என்ற மதுரை நீதிமன்ற உத்தரவு சரியானது என்றே தோன்றுகிறது. (நான் மதிப்பவர்கள் உட்பட) பலரும் இங்கே கதறுவது போல் அவள் கலவியே பெறக் கூடாது என்று மறுப்பது இதன் நோக்கம் அல்ல. பசி போல் காமம் என்பதும் அடிப்படை மனிதத் தேவை. தாராளமாய் பெறட்டும். ஆனால் அவளுடன் கலவியில் ஈடுபடுபவன் அவளது ஜீவனைக் … Read more

கோவை புத்தகத் திருவிழா

பெரிய ஊர். கல்லூரிகள் நிறைய இருக்கும் ஊர். படித்தவர்கள், செல்வந்தர்கள், மாணவர்கள், உயர் மத்திய வர்கத்தினர், மத்திய வர்கத்தினர் இருக்கும் ஊர். ஆனால், வருடா வருடம் மிகக் குறைந்த அளவில் விற்பனையாகும் இடம் கோவை புத்தகக் கண்காட்சி. (கோவையை விட சிறிய ஊர்களான நெய்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் பெரும் விற்பனை ஆகிறது.)  கீழே உள்ள தகவலை சாரு ஆன்லைனில் போடுங்கள். நீங்கள் சொல்லியாவது சில வாசகர்கள் வருவார்களா எனப் பார்ப்போம். ஸ்ரீராம். கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் … Read more

ஒரு உரை, ஒரு காணொளி, சில புகைப்படங்கள்…

தமிழ் ஸ்டுடியோவின் ‘பாலு மகேந்திரா விருது 2015’-இல் சாரு நிவேதிதா உரை: https://www.youtube.com/watch?v=3pJooB6BINQ ‘மீளுமா தமிழகம்?’ (மதுவிலக்கு பற்றி) என்ற தலைப்பில் ஆகஸ்ட் 15, 2015 அன்று சன் ந்யூஸ் தொலைக்காட்சியில் நடந்த ‘விவாத மேடை’ நிகழ்ச்சியின் காணொளி: https://www.youtube.com/watch?v=VoR3NBhsAvs விருட்சம் இலக்கிய நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ். https://www.facebook.com/groups/Charunivedita/permalink/493949584120180/