ப்ளூ கிராஸில் விட்டு விடுங்கள்…

புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்காகப் பணம் கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன்.  ஒருவர் கூட பணம் அனுப்பவில்லை.  அது எனக்குப் பெரிய பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  அந்த ஆச்சரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  அந்திமழைக்கும் தினமணிக்கும் கட்டுரை அனுப்ப வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு இதை நெம்பிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், அந்த அளவுக்கு ஆச்சரியம். … Read more

மகாபாரத அணி Vs காமரூப அணி

இன்றைய தினம் அதிகாலை நான்கு மணி அளவில் ஒரு கனா.  கொடுங்கனா என்றும் சொல்லலாம்.  வேறு மாதிரியும் காணலாம்.  எப்படி அதிகாலை என்று தெரிந்ததென்றால், கனா முடிந்ததும் விழிப்பு வந்து விட்டது.  பார்த்தால் மணி நாலரை.  பலவிதமான வினோத ரசக் கலவை மனநிலையுடன் நடைப்பயிற்சி கிளம்பி விட்டேன். விஷயம் இவ்வளவுதான்.  எழுத்தாளர் சங்கத் தேர்தல் நடக்கிறது.  ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். மகாபாரத அணி Vs காமரூப அணி.  நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், … Read more

பத்து கேள்விகள் : அழகிய சிங்கர் எடுத்த நேர்காணல்

நேற்றைய முன் தினம் அழகிய சிங்கரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அப்போது அவர் என்னிடம் பத்து கேள்விகள் கேட்டு என் பதிலை விடியோ எடுத்தார்.  அதன் இணைப்பு கீழே.  இதே போல் அசோகமித்திரனிடம் பத்து கேள்விகள் கேட்டு விடியோ எடுத்திருக்கிறார்.  அசோகமித்திரனை தி.நகரில் அவரது புதல்வர் இல்லத்தில் சந்தித்தேன்.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு பெரிய கதை.  பிறகு சொல்கிறேன்.  இப்போதைக்கு நேர்காணல்.

படித்ததில் பிடித்தது…

தி இந்துவில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.  புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் இந்து கட்டுரைகள்தான்.  மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.   இரண்டு தினங்கள் முன்பு இந்துவில் வந்த அரவிந்தனின் கட்டுரை முக்கியமானது.  இன்றைய தினம் வெளிவந்துள்ள சமஸின் கட்டுரை மிக மிக முக்கியமானது.  நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன்.  ஒவ்வொரு பசுவும் எனக்கு தெய்வம்.  ஆனால் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் … Read more