தி.ஜா.வை வாசிப்போம்… (1)

தினமணி இணைய இதழில் இந்த மாதம் தி. ஜானகிராமன்.  முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/10/25/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-1921-1982/article3095218.ece

இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…

(இந்தச் சிறுகதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல.  அப்படித் தெரிந்தால் அது தற்செயலானதே!) அசோகமித்திரன் ஏராளமாக எழுதியிருக்கிறார்.  அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார் அல்லவா? அவ்வளவையும் படிப்பது கொஞ்சம் சிரமம்தான்.  ஒருநாள் வாசு வீட்டுக்குப் போன போது இன்ஸ்பெக்டர் செண்பகராமன் என்ற குறுநாவல் தொகுப்பைப் பார்த்து விட்டு ஆர்வமாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.  அவ்வளவுதான்.  இரும்பும் காந்தமும் போல ஒட்டிக் கொண்டது.  முடித்து விட்டே கொடுங்கள் என்றான் வாசு.  நாகேஸ்வர … Read more

வெங்கட் சாமிநாதன்: பனுவல் சந்திப்பு : அசோகமித்திரன் படைப்புகள்

பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் அடிப்படை உணர்வுகள் சில என்னிடம் இல்லை என்பதை என் வாழ்நாளில் ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறேன்.  உருகி உருகி நான் அன்பு செலுத்திக் கொண்டாடிய மகள் பிரிந்தாள்.  ஒரு குட் பை சொன்னதோடு முடிந்தது.  பத்து ஆண்டுகள் என் மீது உயிரையே வைத்திருந்த ஒரு பெண் “உன்னைப் பிரிகிறேன்” என்றாள்.  ஸலூட்.  நைனா காலைல இறந்துட்டாங்கண்ணெ… என்றான் தம்பி.  ”அப்படியா, ஒரு பத்திரிகைக்கு (உயிர்மை) அவசரமா கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்… முடிஞ்சதும் கிளம்பி வந்துர்றேன்.  அதுக்குள்ள … Read more

ஜனவரி 9, புத்தக வெளியீட்டு விழா

ஜனவரி 9, சனிக்கிழமை அன்று மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில்  எடிட்டர் லெனினும், மனுஷ்ய புத்திரனும், சமஸ்-உம் கலந்து கொண்டு பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்கள்.  எடிட்டர் லெனின் என்னுடைய துக்ளக் கட்டுரைகள் பற்றியும், சமஸ் அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பு பற்றியும், மனுஷ்ய புத்திரன் எக்ஸைல் பற்றியும் பேச இசைந்துள்ளார்கள்.  என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் அன்பர்கள் உடனடியாக இந்த மூவரையும் தொடர்பு கொண்டு என்னைப் … Read more

ஊடக வன்முறை

நடிகர் சங்கத் தேர்தலுக்கு மறுநாள் பேப்பர் வாங்கக் கடைக்குப் போகும் போது தி இந்துவில் பாண்டவர் அணி வெற்றி பற்றிய செய்தியை (தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சரத்குமார் அணி தோற்று விடும் என்று எனக்குத் தெரியும்) தலைப்புச் செய்தியாகவோ முதல் பக்கத்திலோ போட்டிருந்தால் அன்றோடு தி இந்து படிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்ற யோசனையில்தான் போனேன்.  நல்லவேளையாக அந்தச் செய்தி முதல் பக்கத்தில் இல்லை.  எங்கேயோ எட்டாம் பக்க மூலையில் வந்திருந்தது.  தி இந்து என் … Read more

வெள்ளைத் திமிர்

பெங்களூரில் ஒரு ஆஸ்திரேலிய இளைஞன் தன் காலில் எல்லம்மனின் படத்தைப் பச்சை குத்திக் கொண்டிருந்தது சிலருக்குப் பிரச்சினையாக இருந்துள்ளது.  போலீஸ் அந்த இளைஞரை அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு விட்டிருக்கிறது.  அந்த இளைஞன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறார்.  இந்தச் சம்பவம் பற்றி மதச்சார்பின்மை என்பதை ஒரு நோயாகக் கொண்டு வாழும் நோயாளிகள் அலற ஆரம்பித்திருக்கிறார்கள். இது பற்றி என்னுடைய கருத்து இதுதான்:  உலகம் எங்கும் வெள்ளைத் தோல் கொண்டவர்கள் நம்மைப் போன்ற … Read more