பின்நவீனத்துவ போலி!

எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாகப் பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு ‘பின்நவீனத்துவ’ எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்றி ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை.  இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் ‘நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன்.  ஆனால் அவற்றைக் குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை’ என்கிறார்.  புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு … Read more

பாஷோ – வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் ‘பாஷோ’ கவிதை இதழ் பற்றி நிறைய நிலைத்தகவல்கள். தாங்கள்தான், இதை முதன்முதலில் வெளியே சொல்கிறோம் என்ற போலி இறுமாப்புவேறு. சாரு நிவேதிதா புதிய தலைமுறையில் வெளியான வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் தொடரில், ஃபெப்ருவரி 19, 2015 அன்று எழுதியுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள், உயிர்மை வெளியீடாக, ஃபெப்ருவரி 27, 2016 அன்று வெளியாகிறது. – டாக்டர் ஸ்ரீராம்   ***   “பாஷோ. ஜப்பானின் அதிமுக்கியமான ஹைக்கூ கவிஞன். பிறப்பு 1644. … Read more

இறுதிச் சுற்று

அன்புள்ள சாரு, தங்களின் ’சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ படித்தேன். அருமை! உங்கள் எழுத்து எங்களை வசீகரிப்பது புதிதல்ல, இருப்பினும் இது அட்டகாசம்! தங்களின் பணி நெருக்கடிகளுக்கு இடையில் சந்தோஷ் நாராயணனின் ’இறுதிச்சுற்று’ பாடல்களை கேட்க முடிந்ததா? ராமசாமி பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப் பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் … Read more

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே! (2)

நேற்று எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை விட்டு விட்டேன்.  வட இந்தியர்களைப் பொறுத்தவரை கேரல்காரர்கள் முரடர்கள்.  ஆனால் முரடர்களைச் சமாளித்து விடலாம்.  ஆனால் தமிழர்கள் அத்தனை பேரும் பிரச்சினைக்குரியவர்கள்.  காஷ்மீரிகளைப் போல.  தமிழர்கள் அத்தனை பேருமே பிரபாகரன்கள்தான்.  அப்படித்தான் வட இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. இது இலக்கியச் சூழலிலும் பிரதிபலிப்பதை அவர்கள் அவ்வப்போது பார்க்கிறார்கள்.  உதாரணமாக, பாரதீய ஞான பீடம் யாருக்குக் கொடுக்கலாம் என்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்து அறிஞர்கள், எழுத்தாளர்கள் தில்லியில் கூடியிருப்பர்.  … Read more

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!

தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கிடப்பதால் பத்மஸ்ரீ விஷயம் பற்றி எதுவும் எழுதவில்லை.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இது பற்றி ஜெயமோகன் மீண்டும் எழுதியதன் இணைப்பை அனுப்பியிருக்கிறார்.  அவசரமாக சில லிபிய நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் இது பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதித் தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.  முதலில் ஜெயமோகனின் பதிவு. http://www.jeyamohan.in/83865#.Vq9jWfl97IU  ஜெ.யின் அந்த விளக்கத்தில் ”முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு … Read more