படு ரகளையான எழுத்து…

நான் 25 வயதில் எழுதியது போல் இருக்கிறது.  விளாசித் தள்ளியிருக்கிறார் ஜி. கார்ல் மார்க்ஸ்.  அவருடைய முகநூல் பதிவுகளெல்லாம் நூலாக வரப் போகிறது.  எதிர் வெளியீடாக இருக்கலாம்.  கீழே வருவது இப்போதைய ஆட்சியை வறுத்தது.  இதேபோல் முந்தைய கருணாநிதி ஆட்சியையும் செம கிண்டு கிண்டியிருக்கிறார்.  ஆனால் வழக்கம் போல் என் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு நாவலாக வர வேண்டும்.  சோகம், எல்லாம் குறிப்புகளாகவே, கட்டுரைகளாகவே தீர்ந்து போகின்றன.  பெரூவின் மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் இந்த … Read more

The Torrent

அமெரிக்கா அல்லது பிரிட்டனில் வசிக்கும் வாசகர் யாரேனும் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய வேண்டும். Anne Hebert என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் குறுநாவல் தொகுப்பு ஆங்கிலத்தில் எனக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது.  The Torrent (novelles and short stories) என்பது அதன் தலைப்பு.  மிகச் சிறிய புத்தகம்.  ஆனால் 20 டாலர் விலை.  அதை எனக்குத் தருவித்துத் தர வேண்டும்.  வாங்கி அனுப்பினாலும் சரி; அல்லது ஆர்டர் செய்தாலும் சரி.  கொஞ்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது. … Read more

பின்நவீனத்துவ போலி – 3

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதியது: நான் நாற்பது வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவர் என வைத்துக்கொள்வோம். லண்டனிலும் அமெரிக்காவிலும் சிறப்புப் பயிற்சிகள் முடித்துள்ளேன். லட்சக்கணக்கான பிணியாளர்களை குணமாக்கியுள்ளேன். ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளேன். ஒருவர், என் அறுவைசிகிச்சை யுத்திகளை (surgical techniques) குறை சொல்லலாம். இந்த பிணியாளருக்கு இந்த மருந்து தரக்கூடாது என ஒருவர் வாதாடலாம். நான் அதிகமாகக் கட்டணம் வாங்குகிறேன் என குற்றம் சாட்டலாம். தேவையின்றி ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன் … Read more

ஓஷோவும் சாரு நிவேதிதாவும்

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதியது: ஓஷோ இந்த விடியோவில் மூச்சுக்கு முந்நூறு தடவை ‘fuck’ என்கிறார். கேட்கும் அனைவரும் வாய் ஓயாமல் சிரிக்கின்றனர். இப்பொழுது பார்க்கும் பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதே போல், எக்ஸைல் (பக்கம் எண் 319, 320 – இரண்டாம் பதிப்பு) நாவலில்  பு** என்ற வார்த்தையை இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா, என்று எண்ணும்படி சாரு எழுதியிருப்பார். சிரிக்க சிரிக்க படிக்கலாம். ***  

பழுப்பு நிறப் பக்கங்கள் குறித்து…

நவம்பர் 11, 2015 அன்று கார்ல் மார்க்ஸ் தனது முகநூலில் எழுதியது இது.  பழுப்பு நிறப் பக்கங்கள் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27.  மாலை 6.30 மணி.  சனிக்கிழமை.  ராஜா அண்ணாமலை மன்றம்.  இந்தப் புத்தகத்தோடு இன்னும் எட்டு புத்தகங்களும் வெளிவரும். தினமணியில் சாரு எழுதும் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ தொடரில் இந்த வாரம் தி. ஜானகிராமன் குறித்து அவர் எழுதியிருப்பதைப் படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். எழுத்தாளனைக் கொண்டாடுவதன் தொனி குறித்த சில அடிப்படைகளை ஒவ்வொரு … Read more

பின்நவீனத்துவ போலி – 2

அந்த சுரேஷ் கண்ணன் என்ற குஞ்சு ஜெயமோகனின் தீவிர வாசகர் என்று இப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஏன் ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என் மீது எப்போதும் சாக்கடையையும் சேற்றையும் வாரி இறைத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  இதைத்தான் அவர்கள் ஜெயமோகன் அடிக்கடி எழுதி வரும் அற உணர்வு என்று எடுத்துக் கொள்கிறார்களா?  இது விஜய் ரசிகர், அஜீத் ரசிகர் ஆகியோர் போட்டுக் கொள்ளும் சண்டை போல் அல்லவா உள்ளது?  அந்தக் காலத்தில் சிவாஜி ரசிகன் எம்ஜியார் … Read more