நீங்கள் ஒரு எழுத்தாளராக விரும்பினால்…

என் எழுத்தை வாசிக்கும் பல நண்பர்கள் அதில் உள்ள கொண்டாட்டம் குடி போன்ற விஷயங்களைத் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு பல வழிகளில் தங்கள் நேரத்தை மிக மோசமாக வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கும் ஹாருகி முராகாமியின் ஒருநாள் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  இதையேதான் நானும் செய்கிறேன்.  ஒரே ஒரு மாற்றம். அவருடைய மாலை என்னுடைய காலை.  அவருடைய காலை என்னுடைய மாலை. When I’m in writing mode for … Read more

கேசரி, போண்டா, காஃபி மற்றும் இலக்கியம்…

இப்போதெல்லாம் ராயர் கஃபே போவதில்லை.  கூட்டம்.  நெரிசல்.  முழுசாக வட இந்தியர்கள் அதை ஆக்ரமித்து விட்டனர்.  உட்கார்ந்து சாவகாசமாகப் பேசவும் முடியவில்லை.  இப்போதெல்லாம் நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டியுள்ள சந்தில் உள்ள சாயி மெஸ்ஸுக்குத்தான் போகிறேன்.  தினமும் அல்ல; எப்போதாவது.  தென்சென்னையிலேயே சுவையான டிஃபன் கிடைக்கும் இடம் என்றால் இப்போதைக்கு சாயி மெஸ்தான். ஃபெப்ருவரி 27 விழாவுக்கு வருபவர்களுக்குக் கொஞ்சம் காப்பி டீ கொடுக்க வேண்டாமா என்று கேட்டார் டாக்டர் ஸ்ரீராம். … Read more

கன்னி மாங்கா…

காலையில் நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.  மணி ஒன்பதரை. அப்போது எடிட்டர் லெனினிடமிருந்து ஃபோன்.  நேற்றுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடு நினைத்தேன், இன்னும் லெனின் சாருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையே என்று.  இன்று எப்படியும் கொடுத்து விட வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன்.  வழக்கம் போல் மறந்து போனேன்.  பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஆதவனைப் படித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்.  உடனே ஆட்டோவை நிறுத்தி விட்டு, ”கிளம்பி நான் பார்க்குக்கு வரவா, அங்கே வந்து … Read more

ஒரு கலைஞனின் வருகை…

  (பின்வருவது ஜி. கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதிக்கு (எதிர் வெளியீடு) அடியேன் எழுதிய முன்னுரை.  நூல் வெளியீட்டு விழா மார்ச் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது.)   லௌகீக வாழ்வில் எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது;  ஆனால் இலக்கிய வாழ்வில் உண்டு.  அதில் முக்கியமான ஒன்று, கீழ்வரும் பட்டியலில் அடங்குபவர்கள் யாராலும் நல்ல, காத்திரமான இலக்கியம் படைக்க முடியாது.  யார் அவர்கள் … Read more

ஒரு அதிர்ச்சியும் ஒரு அறிவிப்பும்…

http://www.jeyamohan.in/84691 இந்தப் பதிவில் ஜெயமோகன் முதலில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ‘புகைப்படங்கள்: நன்றி பிரபு காளிதாஸ்’ என்று போடவில்லை. அதற்கு பிரபு காளிதாஸ் கீழே உள்ளதை தன் முகநூலில் எழுதினார். ***   பிரபு காளிதாஸ், முகநூல், 16.2.16 என் பெயரில் ஒரு Photo courtesy credits கூட இல்ல பாத்தீங்களா….? தட் இஸ் ஜெயமோகன்…Attitude matters….புகைப்படங்கள் ஒருபோதும் வானிலிருந்து தேவன் வந்து எடுப்பதில்லை. நான் புகைப்படங்கள் எடுத்து Photo documentation செய்வது உயிர்மை … Read more

புத்தக வெளியீட்டு விழா – காணொளி

காலையில் எழுதிய போது மறந்து போனேன்.  எஸ். ராமகிருஷ்ணனும் விழாவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.  அநேகமாக இந்த விழாவில் எங்கள் மூவரையும் படம் பிடித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம்.  விழா பற்றிய என்னுடைய சிறியதொரு உரை இந்தக் காணொளியில் உள்ளது.  நன்றி: ஷ்ருதி டிவி நண்பருக்கு…