விழா பதிவுகள் – 12

விழா முடியும் போது மணி 9.35.  நான் எட்டு மணிக்கும் பிறகு ஒன்பது மணி அளவிலும் பேசினேன்.  எட்டரை மணிக்கு நான் பேசி முடித்ததும் கணேசன் அன்பு வட பழனி கிளம்பி விட்டார்.  அவர் கிளம்பியது எனக்குத் தெரியாது.  அங்கே நாங்கள் பத்தரைக்கு வருவதற்குள் பதினைந்து பேருக்குக் கோழி பிரியாணி தயாரிக்கும் வேலையில் இறங்கி விட்டார்.  அவருக்கு உதவி முருகன் கடற்கரை.  நான் பனிரண்டு மணிக்கே உறங்கச் சென்று விட்டதால் பிரியாணிக்கு முன்னதாக சோறும் கோழிக் குழம்புமாகப் … Read more

விழா பதிவுகள் – 11

நண்பர் யுவ கிருஷ்ணா முகநூலில் எழுதியிருப்பது: போன வார இறுதி ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஓர் இலக்கிய விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொள்வது அரிதிலும் அரிதான நிகழ்வு. இத்தனைக்கும் அன்று இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி வேறு. சாருவின் புத்தக வெளியீடுகளில் 90% இளைஞர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவும் விதிவிலக்கல்ல. இணையத்தளங்களில் அவர் மீது வெளிப்படும் வன்மம் எவ்வளவு போலியானது என்பதை ராஜா அண்ணாமலை … Read more

விழா பதிவுகள் – 10

ஹாய் சாரு, இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பதா, இலக்கிய விழாவிற்கு போவதா என்று குழம்பி, நாஞ்சில்நாடனின் இந்த வரி “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” மனசாட்சியை உறுத்த விழாவிற்கு வந்தேன். ஒரு இலக்கிய விழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. நீங்கள் சிறந்த பேச்சாளராகி விட்டீர்கள். விழாவில் பேசிய மற்ற அனைவரையும் விட உங்களது பேச்சு அருமையாக இருந்தது. முதல் இரண்டு நிமிடம் … Read more

ஒரே மூச்சில் படிக்க ஒரு புத்தகம்

தி இந்துவில் ‘ஒரே மூச்சில் படிக்க ஒரு புத்தகம்’ என்ற தலைப்பில் ‘கடைசிப் பக்கங்கள்’-ஐக் குறிப்பிட்டுள்ளனர்: http://bit.ly/1UsglKB இணையத்தில் வாங்க: http://bit.ly/1nahoS6 http://www.nhm.in/shop/9789384149574.html