கோவையில் புத்தக வெளியீட்டு விழா (உயிர்மை)

வரும் 12-ஆம் தேதி கோவையில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் அடியேனும் பேசுகிறேன். இப்போதெல்லாம் கூட்டங்களில் எல்லோரையும் பாராட்டியே பேசுகிறீர்களே, வயதாகி விட்டதா என்று பலரும் கொஞ்சம் கிண்டல் தொனியுடன் கேட்கிறார்கள்.  திட்டினால் திட்டுகிறார் என்றும், பாராட்டினால் பாராட்டுகிறார் என்றும் புகார் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.  விஷயம் ஒன்றுமில்லை; பிடிக்காத புத்தகங்களைப் பற்றிப் பேசுவதில்லை.  அவ்வளவுதான்.  உண்மையில் விசாரணை பட விழாவில் ஒரு சிறிய அரங்கில் 1000 சினிமா ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். … Read more

விழா பதிவுகள் – 17

டியர் சாரு, கடந்த வாரம் நடந்த தங்களது புத்தக வெளியீட்டில் நானும் கலந்து கொண்டேன். முதன் முதலில் உங்களை நேரில் கண்டதும் அன்றுதான். இன்னும் என்னால் அந்த பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை. சிறு வயதில் எங்களது கிராமத்தின் அருகில் நடைபெறும் தேர்திருவிழா கடைத்தெரு போல இருந்தது. அத்தனை excitement. அத்தனை கொண்டாட்டம். பிற வாசகர்களைப் போல் நிரம்பப் படித்தவனில்லை நான். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு. உங்களது அட்டகாசமான எழுத்து நடைக்கு நிகர் பிறிதொரு எழுத்து … Read more

காமெடி பீஸ் – 2

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.  நேர்காணலை காமெடி பீஸாக மாற்றிய ஒன்று, என்னுடைய தியான புகைப்படம்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது.  அதில் மெக்ஸிகோவின் நம்பர் ஒன் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களுக்கு முன்பு நின்றும் நான் போஸ் கொடுத்தேன்.  அதுதான் என்னுடைய எழுத்துக்கும் என் வாழ்க்கைக்கும் என் எழுத்தின் செய்திக்கும் உகந்ததாக இருக்கும்.  அந்தப் புகைப்படங்கள் பத்து அடி அகலமும் ஐந்தடி அகலமும் கொண்டவை.  பிரம்மாண்டமானவை. விஷயம் என்னவென்றால், … Read more

காமெடி பீஸ்…

சில தினங்களுக்கு முன்பு விகடனிலிருந்து ஒரு நேர்காணலுக்குக் கேட்டார்கள்.  சரி என்றேன்.  எப்போதுமே ஒரு எழுத்தாளன் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைய விருப்பப்படுவான் தானே? எனக்கு இப்போது வயது 63.  என் முதல் கதை வெளிவந்த போது என் வயது 23.  சாவி தான் வெளியிட்டார். கதையின் பெயர் கனவுகள் சிதையும்.  சாவி நடத்திய பத்திரிகை. பத்திரிகை பெயர் ஞாபகம் இல்லை. அப்புறம் தில்லி போய் விட்டேன்.  வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் ஆசை போய் விட்டது. கணையாழியில் … Read more

வருவதற்கு முன்பிருந்த வெயில்…

எதிர் வெளியீடு மார்ச் 19 முதல் வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) ஜி. கார்ல் மார்க்ஸ் ரூ.100 கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன். – சாரு நிவேதிதா