சாகத் தயார் (3)

இலக்கியம் விளக்கு. அது ஒளிகொடுக்கும், வழிகாட்டும். ஆனால் தனக்குக் கீழே விழும் சொந்த நிழலை விலக்க விளக்கினால் முடியாது. அது காளிதாசனின் உவமை. அந்த அகங்காரத்தின் நிழலைக் கண்டு அஞ்சித்தான் மாபெரும் கலைஞர்கள்கூட இலக்கியத்தைவிட பெரிய ஒன்றின் காலடி தேடினார்களா? ‘எனக்கு ஒரு கடிகையில் தேசபக்தியையும் ஞானத்தையும் அளித்த விவேகானந்தரின் தர்மபுத்திரியான நிவேதிதா தேவிக்கு’ என்று பாரதி தன் கவிதைகளை காலடியில் சமர்ப்பணம் செய்கிறான் செல்லப்பாவுக்குத் தேவை அத்தகைய ஒரு சன்னிதி என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்கான … Read more

சாகத் தயார் (2)

முதல் பதிவைப் படித்து விட்டு எனக்கு ஜெ. மீது பொறாமை என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.  ஏற்கனவே என் பேச்சில் கூறியபடி ஜெயமோகனோ எஸ். ராமகிருஷ்ணனோ எனக்குப் போட்டியாளர்கள் அல்ல.  நான் போட்டியாளர்களாக நினைப்பது ஓரான் பாமுக்கையும் ஸல்மான் ருஷ்டியையும்தான்.  நான் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  அந்த விருப்பதையும் மிக வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்.  என்னிடம் எதுவுமே ஒளிவு மறைவு இல்லை. பொதுவாகவே லட்சியவாதம் என்பது ஃபாஸிஸம் நோக்கித்தான் நம்மை இட்டுச் … Read more

சாகத் தயார்! (திருத்தப்பட்டது)

மது அருந்துவதை நிறுத்தியதால்தான் என் உயிர் இப்போது என் வசம் இருக்கிறது.  இல்லாவிட்டால் இந்நேரம் எனக்கு ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதியிருப்பார்.  ஒரு தனிப்பட்ட  இலக்கிய விவாதத்தில் ஜெயமோகனின் நூறு சந்நிதானங்கள் என்ற கதையைப் பற்றி நான் விமர்சித்ததும் ஒருவர் என்னை அடிக்க வந்தார்.   தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து ஆவேசமாக என்னை நோக்கி மிக மிக அசிங்கமான வசை வார்த்தைகளைப் பிரயோகித்தபடி வந்ததை, எனக்கு முத்தம் கொடுக்க வந்தார் என்றா புரிந்து கொள்ள முடியும்?  அடிக்கத்தான் … Read more

விழா பதிவுகள் – 23

புகைப்படத்தில் டாக்டர் ஸ்ரீராம், நிர்மல், ஜெகா.  நின்று கொண்டிருப்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த கருணாநிதி அர்ஜித். இரண்டாவது புகைப்படத்தில் ஆத்மார்த்தி, கணேச குமாரன்.  முதல் வரிசையில் உமா ஷக்தி. உமா சக்தி முகநூலில்: விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எப்போதும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அரங்கு நிறைந்த கூட்டம் இருக்கும். இன்றும் அப்படியே. கடல் கடந்தும் அவரைக் கொண்டாட நண்பர்கள் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி.சாருவைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவும் புத்தக வெளியீடு முடிந்தவுடன் கிளம்பவும் முடிவு செய்திருந்தேன். … Read more

விழா பதிவுகள் – 22

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மனாசே விழா பற்றி எழுதியிருந்தது இது.  மனாசேவுக்கு என் எழுத்து வெறும் எழுத்து மட்டும் அல்ல.  அவர் என் எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அவர் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும்.  அவர் வாழ்வின் போக்கை மாற்றியது என் எழுத்து என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.  மனாசேவுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லை.  நான் எதையும் திருத்தவில்லை.  அவர் எழுதியபடியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன்.  ஆனால் விழா பற்றிய பதிவுகளிலேயே ஆக முக்கியமானதாக இதைக் கருதுகிறேன். … Read more

விழா பதிவுகள் – 21

வேறு தேதியில் விழா நடத்தப்பட்டிருந்தால் திரையுலக, தொலைக்காட்சி நண்பர்கள் பலரும் வந்திருப்பார்கள்.  முக்கியமாக, பார்த்திபன், ராதா மோகன், தயாரிப்பாளர் ராம்ஜி, விஜய் டிவி ஆண்டனி.  சிங்கப்பூரில் வசிக்கும் அகிலன் முதலில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நம்முடைய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு பிறகு இளையராஜா விழாவுக்குச் சென்றார்.  போகும் போது என்னை மேடையிலிருந்து அழைத்து சொல்லி விட்டுச் சென்றார்.  அவருக்கு என் நன்றி.  மேலே உள்ள புகைப்படத்தில்: ஓவியர் சீனிவாசன், எஸ். வைத்தீஸ்வரன், … Read more