63 வயதில் சால்ஸா கற்றுக் கொள்வது எப்படி? – அராத்து

நான் போகும் சால்ஸா வகுப்பில் நான் தான் அதிக வயது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு 70 வயதுத் தாத்தாவும் இருக்கிறபடியால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது.  இது பற்றி அராத்து எழுதியதைப் படித்து ரொம்பவே ரசித்தேன்.  என்னைத் தாக்குவது போல் இருக்கிறது என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.  பொதுவான நிலைமையைச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாசகர் வட்டத்தில் சாருவைக் கிண்டலடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. அவருடைய கணினியில் ‘க்’ என்ற … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு. செல்லப்பா : பகுதி 2

பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமண பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்தக் காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். அன்றைய நாள் 31 ஆகஸ்ட் 1896. பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது. ‘இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம … Read more

புதிய அரங்கம்

புதிய அரங்கம் – சென்னையில் புத்தக வெளியீடு, திரையிடல் நிகழ்வுகள் நடத்த… நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் வடபழனி அலுவலகத்திற்கு ஏப்ரல் 14ஆம் தேதி குடிபெயரவிருக்கிறோம். வடபழனியில் மிக அருமையான சினிமாவிற்கான ஒரு ஒருங்குகூடலாகவே இந்த அலுவலகம் திகழும். அலுவலகம் என்பதை தாண்டியும், இன்னொரு முக்கியமான பொது பயன்பாட்டிற்கும் இந்த இடம் உதவப்போகிறது. அது பற்றி பின்னர் அறிவிக்கிறேன். ஆனால் இன்னொரு வகையிலும் நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் நாற்பது பேர் … Read more

மனிதாபிமானிகளின் அக்குறும்பு…

அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு, நல்லவர்களை விட எனக்குத் திறமைசாலிகளே தேவையாக இருக்கிறார்கள் என்று.   நல்லவர்கள் என்னைப் போலவே பேக்குகளாக இருக்கிறார்கள். அதேபோல் இன்னொரு டார்ச்சர் பேர்வழிகள் மனிதாபிமானிகள்.  அடிக்கடி அவர்களை நான் நண்பர்களாக அடையும் பேறு பெறுகிறேன்.  அப்படிப்பட்ட மனிதாபிமானிகள் போனில் அழைத்தால் எடுக்காமல் போன் அழைப்பை வெட்டி விட்டு அவர்களே அழைப்பார்கள்.  காரணம், என்னுடைய செலவைக் கட்டுப்படுத்துகிறார்களாம்.  எப்போது பார்த்தாலும் நான் ஏழை, பணத்துக்கு சிரமப்படுகின்றவன் என்றேவா ஒருத்தரின் மனதில் என்னைப் பற்றிய … Read more

இச்சைகளின் இருள்வெளி – ஒரு மதிப்புரை

இச்சைகளின் இருள்வெளி நூலுக்கு டாக்டர் ஸ்ரீராம் மதிப்புரை எழுதியுள்ளார். *** நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும். மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post_24.html

Charu Nivedita – An Installation by N.Srinivasan

புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார். “சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; … Read more