பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 1)

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. மேலும் படிக்க: http://bit.ly/29C3vsO  

“சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே”

சாரு, சமீபத்தில் உங்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அது அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் சமீபத்தில் ஏற்பட்டது உங்கள் ரசனையின் மேல். நான் உங்களை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன். நீங்கள் எழுதியவற்றில் இரண்டு மூன்று புத்தகங்களைத் தவிர (ரெண்டாம் ஆட்டம், தீராக் காதலி, எங்கே உன் கடவுள் (துக்ளக் அப்போது கையில் கிடைக்க வில்லை)) மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் என் சிந்தனைப் போக்கில் உங்கள் தாக்கம் அதிகம் இருந்தது. … Read more

இருவர்

என்னை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் சிலரில் ஆக முக்கியமானவர்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம்.  ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.  நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.  சமீபத்தில்தான் ஒரு நண்பரிடம் எஸ்.ரா. சென்னையின் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொண்டால்தான் உண்டு.  சமீபத்தில் அப்படிச் சந்திக்க நேர்ந்த போது ”ArtReview Asiaவில் நீங்கள் எழுதுவது மிகப் பெரிய விஷயம்; மிகப் பெரிய கௌரவம்” என்றார். இன்னொருவர் ஜெயமோகன்.  அவரும் … Read more

மோர் சாதமும் தாமதமாக வந்த அழைப்பும்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முகநூலில் அடியேன் இட்ட பதிவுகள்: ப்ராமின் கேர்ள்ஸைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. நம்மையும் ப்ராமின்னு நினைச்சுக்கிட்டு அடையார் ஆனந்த பவன் ஜிலேபி கொடுத்து விடுகிறார்கள் பக்கத்து வீட்டு எதிர்வீட்டு இஸ்லாமிய சகோதரர்கள்! பிரியாணி வாசனை நம்மை நாலா பக்கமும் தூக்கி அடிக்க அடையார் ஆனந்த பவன் ஜிலேபி சாப்பிடுவது எவ்வளவு கொடுமை தெரியுமா நண்பர்களே! 12 மணி. மோர் சாதம், தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயத்தோடு இன்றைய … Read more