பழுப்பு நிறப் பக்ககங்கள்: சா. கந்தசாமி (பகுதி 2)

“புளிய மரத்தடியில் பத்துக்குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். மனம் திக்கென்றது. அப்பீட் எடுக்கவில்லை. சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு ‘சார்’ என்றான்.” இந்த இரண்டு வாக்கியங்களில் இன்றைய வாழ்வில் காணாமல் போய் விட்ட பத்துக்குத்து, அப்பீட், சாட்டை என்ற மூன்று வார்த்தைகள் உள்ளன. இப்படியே கந்தசாமியின் அத்தனை எழுத்துக்களிலும் தேடி ஒரு தனி அகராதியையே உருவாக்கலாம். ஆக, இப்படிப்பட்ட கலைஞர்களின் மூலம்தான் ஒரு மொழி நூற்றாண்டுகளைத் தாண்டி … Read more

ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100

மேற்கண்ட தலைப்பில் இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் தினமலர் சினிமா பக்கத்தில் எழுதுவேன்.  இன்று முதல் கட்டுரையின் முதல் பகுதி வந்துள்ளது.  நண்பர்கள் படிக்கவும்.  கட்டுரை விரிவான ஆய்வாக இராது.  300 வார்த்தைகளில் எந்த அளவுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு செய்திருக்கிறேன்.  பொதுவாக உலக சினிமா என்றால் அது ஹாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கிறது.  பல சினிமா கலைஞர்களின் உலக சினிமா பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் ஹாலிவுட் சினிமா.  மனப்பாடமாகவே சொல்லி விடலாம்.  காட்ஃபாதர், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், … Read more

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 25 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 59, 60) கிடைக்கும். உயிர்மை புத்தகங்கள் நாதம் கீதம் அரங்கில் கிடைக்கும். இடம்: அரண்மனை வளாகம், தஞ்சாவூர் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை – ஸ்ரீராம்  

ஒசூர் புத்தகக் கண்காட்சி

ஒசூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் – 12, 13) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 48) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: R.K. மஹால், சீனிவாசா திரையரங்கம் பின்புறம், E.B. அலுவலகம் அருகில், இராயக்கோட்டை சாலை, ஓசூர். – ஸ்ரீராம்

அரியலூர் புத்தகக் கண்காட்சி

அரியலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 94, 95) கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பேருந்து நிலையம் அருகில், அரியலூர். – ஸ்ரீராம்