ராஸ லீலா விமர்சனக் கூட்டம் – இன்று மாலை

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்

தமிழ் எழுத்தாளன்

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய சிறுகதையில் எழுத்தாளர் என்ற வார்த்தை ஒழுத்தாளன் என்றே குறிக்கப்பட்டிருக்கும்.  அதற்குக் காரணம், இந்த சூழல் மீது நான் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும்.   ஏன் அதிருப்தி என்பதற்கு பின்வரும் நேர்காணலைப் படித்துப் பாருங்கள்.  எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது.  சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில் பணம் இல்லை.  வசித்துக் … Read more

ராஸ லீலா – விமர்சனக் கூட்டம்

நண்பர்களே, வரும் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு ராஸ லீலா பற்றிய கூட்டம் நடைபெறுகிறது. பேசுபவர்: அழகிய சிங்கர். தலைமை: ரவி தமிழ்வாணன். கூட்டம் மிகச் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து விடும். தேநீர் நேரம் 5.45. ரவி தமிழ்வாணன் நேரம் கடைப்பிடிப்பதில் ராணுவ ஒழுங்குக்குப் பேர் போனவர். TAG கூட்டங்கள் அனைத்துமே மிகச் சரியான நேரத்தில் ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்து விடும் என்று அறிகிறேன். இந்த ஆண்டு என்னுடைய புத்தக வெளியீட்டு … Read more

தி இந்து தீபாவளி மலர்

தி இந்து நாளிதழின் தீபாவளி மலரில் ஃப்ரெஞ்ச் சினிமாவும் அதன் தாக்கமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன். சினிமா பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் இது முக்கியமானது. அதிகம் நான் ஃப்ரெஞ்ச் சினிமா பற்றி எழுதியதில்லை. இதுதான் முதல். மிக நீளமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை. பக்க அளவு கருதி குறைத்து விட்டேன். பத்திரிகைகள் நிர்ணயிக்கும் அளவை மீறி ஒரு வார்த்தை கூட எழுதுவது எனக்குப் பழக்கம் இல்லை. ஆனால் பார்த்தால் செழியனின் ஈரான் சினிமா பற்றிய கட்டுரை … Read more

கிருஷ்ணா என்ற கிளியும் கிருஷ்ணா எழுதிய கிளியும்… பிரபு காளிதாஸ்

பிரபு காளிதாஸ் முகநூலில் எழுதியது: விகடனில் மனுஷ்ய புத்திரன் எழுதிய “கிளிக்காவியம்” படித்தேன். கிளி பற்றிய கவிதை என்பதால் முதலில் படிக்காமல் விட்டுவிடலாம் என்று இருந்தேன். காரணம், செல்லப்பிராணிகள் கதைகள் பூராவும் துயரத்தில் தான் முடியும் என்பது மாற்றமுடியாத விதி. நான் வளர்த்த “கிருஷ்ணா” எனும் கிளியை மறுபடி இந்த கவிதை கிளறிவிட்டால் என்ன செய்வது என்று பயம். அப்புறம் தைரியம் வரவழைத்துப் படித்து விட்டேன். பயங்கரமான கவிதை. அது என் கிருஷ்ணா பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது. … Read more