ஞாயிற்றுக்கிழமை மாலை

குடியை நிறுத்திய பிறகு – எப்போது நிறுத்தினேன் என்று ஞாபகம் இல்லாத அளவுக்கு நீண்ட காலம் ஆகி விட்டது – நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவரை நிரந்தரமாகப் பிரிந்து வாழும் தனிமையை உணர்கிறேன். குடியோடு வாழ்ந்த போது ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ரெமி மார்ட்டின் அல்லது ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அபிஸிந்த் போன்றவற்றோடு கழியும். இப்போது அது கடந்த காலம். மேலும், என்னைப் போன்ற முழுநேர எழுத்தாளனுக்கு – எத்தனை அபத்தமான பிரயோகம் முழுநேர எழுத்தாளன், … Read more

அங்கமாலி டயரிஸ்

21.3.17 சற்று முன்புதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியுடன் பேசினேன். என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். கூடவே விஜய் பாபுவும் பிரஷாந்த் பிள்ளையும் இருந்தார்கள். பிரஷாந்த் பிள்ளையிடம் சொன்னேன், எனக்கு எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு எந்த இசையமைப்பாளர்களையும் அவ்வளவாகப் பிடிக்காது. ராஜாவின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் பிடிக்காது. ஏ.ஆர். ரஹ்மானை சுத்தமாகப் பிடிக்காது. மற்றபடி என்னை அசர வைத்த இசையமைப்பாளர் என்று சொன்னால் அது தேவ்.டி அமித் த்ரிவேதி மட்டும்தான். அந்த அமித் த்ரிவேதிக்குப் பிறகு நான் மிரண்டு போன … Read more