ஆபாசப் புகைப்படங்கள் குறித்து…

30.04.2017 பொதுவாக என்னைப் பற்றி பிரச்சினை செய்பவன், வில்லங்கம் என்று பலரும் சொல்வதைக் கேள்வியுற்றிருக்கிறேன்.  அப்படியெல்லாம் இல்லை என்பது என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும்.  மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் எனக்குச் செய்யும் வில்லங்கம் பற்றிக் கறாராகச் சொல்லி விடுவேன்.  இதுதான் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.  சொன்னவுடனே, தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குப் பதிலாக என்னைத் தங்களின் ஜென்ம விரோதிப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.  எனக்கும் அது பற்றித் துளிக் கவலையும் இல்லை என்பதால் வாழ்க்கை … Read more

ஜெய் பாகுபலி : கார்ல் மார்க்ஸ்

30.04.2017 கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது: ராணி நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சாவில் மர்மம் இருப்பதாக மக்கள் முணுமுணுக்கிறார்கள். ராணியின் தோழியை தனிமைச் சிறையிலடைக்கிறான் எதிரி நாட்டு மன்னன். ஆளற்றுக் கிடக்கும் அரண்மனையின் காவலாளியை அடித்துக் கொல்கிறார்கள் கள்வர்கள். போகும் வழியில் அவர்களும் ரத்த வெள்ளத்தில் இறக்கிறார்கள். மந்திரிசபையில் இருந்தவர்கள் துரோகிகளாக மாறுகிறார்கள். நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. அந்த வருடம் வெய்யிலின் உக்கிரம் கூடிக்கொண்டே போகிறது. தென்னைகள் கருகி, தாகம் தாங்காமல் மரித்த கால்நடைகளின் மீது வீழ்கின்றன… ஜெய் பாகுபலி!!! … Read more

பாகுபலி – 2

30.4.17 இதையே எனது பாகுபலி 2 விமர்சனமாகக் கொள்ளவும். நல்லவேளை, நான் எழுதியிருந்தால் நிறைய கெட்ட வார்த்தைகள் சேர்த்திருப்பேன். ராஜேஷ் நல்லவர், கனவான். எனவே அதையே இங்கு கொடுக்கிறேன். http://karundhel.com/2017/04/baahubali-2-the-conclusion-2017-tamil-telugu.html

நல்ல பிள்ளை கெட்ட பிள்ளை

28.4.17 ஒரு தாய். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளை குடிகாரன், ஸ்த்ரீலோலன், அடிக்கடி வம்பு தும்பு செய்து பெண்களிடம் அடி வாங்குபவன். ஊரில் ஒருத்தரிடம் கூட நல்ல பேர் கிடையாது. பார்க்க நன்றாகத்தான் இருப்பான். ஆனால் கொனஷ்டையான ஆடை அணிகலன்களால் தன்னை ஒரு பொறுக்கி போல் காட்டிக் கொள்வான். இளையவனும் குடிகாரன் தான், ஸ்த்ரீலோலன் தான். ஆனால் அவன் அப்படி இருப்பது யாருக்கும் தெரியாது. யாருக்குமே தெரியாது. எப்போதும் பெண்களிடம் நல்ல பேர். ஊரிடமும் நல்ல … Read more