வதைகளின் கலைஞன்: வளன் அரசு

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதாக அறிவித்தவுடன் பல்வேறு கொண்டாட்டங்களும் சர்ச்சைகளும் நிலவிவருகிறது. என்னைப் பொருத்த வரை எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்றாலும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாருவை நான் என் தந்தையாக பாவித்து வருவதால் வாழ்த்துகள் சொல்வது அபத்தமாக இருக்கும். இப்போதுதான் இந்தியா வந்துவிட்டு திரும்பியதால் அடுத்த விடுமுறைக்கு இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் மாத விருது நிகழ்வுக்கு கண்டிப்பாக வந்திருப்பேன். தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் என்ற நிலைக்கு உரியவர் சாரு நிவேதிதா … Read more

இதுதான் நான்…

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லா மனிதர்களுமே இப்படித்தான் இருந்திருப்பார்கள், ஈகோ, பணம், அதிகாரம் போன்றவற்றின் அறிமுகம் இருந்திராவிட்டால். வளன் அரசுவின் கட்டுரையிலிருந்து… இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் … Read more

சிறந்த பாராட்டுகளில் ஒன்று…

என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் … Read more

சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி

Warning: நீண்ட பதிவு மற்றும் சாருவைப் பிடிக்காதவர்கள் அப்படியே இதைக் கடந்து போக கேட்டுக் கொள்கிறேன். நான் படித்துப் புரிந்துகொண்ட சாருவை கூடிய மட்டும் சொல்ல விழைந்திருக்கிறேன்.* சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), … Read more

சகாக்கள்

பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முத்தம் கொடுத்துக் கொள்ளாத குறையாகக் கொஞ்சிக் கொள்வார்கள்.  ஆனால் எழுத்து என்று வரும்போது விஷத்தைக் கக்குவார்கள்.  சமீபத்தில் என் ஆவணப்படத்துக்காக ஒரு எழுத்தாளரைச் சந்தித்தேன்.  நேரில் இனிமையின் சொரூபமாகப் பேசியவர் எங்கள் சந்திப்பு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதும் போது விஷத்தைக் கக்கியிருந்தார்.  நான் அப்படி இல்லை.  தர்மு சிவராமு மாதிரி.  எனக்குப் பிடிக்காதவராக இருந்தால் வாய் வார்த்தையாக வணக்கம் கூட சொல்ல மாட்டேன்.  அவராகவே வலிய வந்து சொன்னாலும் … Read more

விசித்திர வீரியன் : அராத்து

2017 இல் எழுதி இருக்கிறேன். சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருதை பெறும் இந்த நேரத்தில் இதுவரை படிக்காதவர்களுக்காக பதிவிடுகிறேன். சாருஆன்லைன்.காம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கால கட்டம். ஒருநாளில் நான்கைந்து முறை ஏதேனும் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்போம். குடி, குட்டி, மது, மாது (இரண்டுக்கும் வேறுபாடு உண்டு) என்று சாரு நிவேதிதா கலர்ஃபுல்லாக இருந்தது போன்ற இமேஜுடன் இருந்துகொண்டிருந்த கால கட்டம் அது. (இப்போது என்பதால் இப்படி நீட்டி முழக்கி பம்ம வேண்டியுள்ளது). இலக்கியமாவது … Read more