எழுத்தாளரும் வாசகரும்

அன்புள்ள சாரு, “நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்” என்று முந்தைய மின்னஞ்சலில் எனது விருப்பமாக எழுதியிருந்தேன். அடுத்த நாள் இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தியாக தங்களுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மிக்க மகிழ்ச்சி. தங்களது ப்ளாக் மற்றும் சில நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது முள், ஜீரோ டிகிரி, ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி. தற்போது நான்தான் ஔரங்ஸேப் முன்பதிவும் செய்துள்ளேன். உங்களின் எழுத்துகளை வாசித்து உங்களை நெருக்கமாக உணர்வதால் உங்களுக்கு எழுத … Read more

பாண்டிச்சேரி சந்திப்பு

என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் வருகின்ற பதினேழாம் தேதி பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள காட்டு இல்லத்தில் சந்திக்கலாம். அடர்ந்த காடு. அங்கிருந்து முக்கால் கிலோமீட்டர் நடந்தால் வீதியும் கடைத்தெருவும் வந்து விடும். காட்டு இல்லத்தின் அருகிலேயே பல தங்கும் விடுதிகளும் உள்ளன. இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வினித்திடம் கேட்டால் விவரம் சொல்வார். பகலில் மது அருந்தக் கூடாது. இரவில் அருந்துபவர்களும் என்னோடு உரையாடுவது சாத்தியம் இல்லை. சென்ற முறை … Read more

இலக்கியத்தின் இடம்: ஒரு கடிதம்

அன்புள்ள சாரு , அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கும் , தங்களிருவரின் வாசகராகிய எனது பணிவான வணக்கங்கள். 2005-ல் எனக்கு சாருவின் எழுத்து அறிமுகமானது. அப்போது தினமலர் இணையதளத்தில் சாருவின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. 2005-2008-ல் என் வாழ்வில் நடந்த துயரங்களுக்கு சாருவின் எழுத்து அருமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருந்தது.  அந்த சமயத்தில் வெளிப்பார்வைக்கு இலக்கிய வம்பாக சாரு ஜெயமோகனை பற்றி எழுதிய பதிவுகள் மூலமாக ஜெயமோகன் எழுத்து எனக்கு அறிமுகமானது. சாருவின் எழுத்துக்கள் (புனைவு & அ -புனைவுகள் ) … Read more

சாரு நிவேதிதா – எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான விளையாட்டு : அராத்து

(அராத்துவின் இந்தக் கட்டுரையை வெளியிடலாமா வேண்டாமா என்று மிகவும் குழப்பத்துடன் யோசித்தேன். பிறகு என்னுடைய தற்காலத்தியப் பாதுகாப்பை முன்னிட்டு ஒருசில வாக்கியங்களை மட்டும் சிறிதளவு மாற்றி வெளியிட்டிருக்கிறேன், அராத்துவின் அனுமதி வாங்காமலேயே. ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். ஏற்கனவே அவர் என்னிடம் ”உங்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒருசிலர் உங்களை மைலாப்பூர் மாமா மாதிரி ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது” என்று சொல்லி வருகிறார். கட்டுரையில் கை வைத்தது என்னுடைய பாதுகாப்பை முன்னிட்டே தவிர வேறு … Read more

ஒரே ஒரு கேள்வி (குறுங்கதை மாதிரி)

அந்த நண்பர் ஹைதராபாதில் வசிக்கிறார். பால குமாரனின் தீவிர பக்தர்.  ஆம், பக்தர்.  ஒரு கட்டத்தில் அவருக்கு குருவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் வந்தது.  (அவரே சொன்னது.)  மாற்றிக் கொண்டார்.  நான்தான் அவர் தேர்ந்தெடுத்த புதிய குரு.  ஹைதராபாதுக்கு விமான டிக்கட் போட்டு வரவழைத்தார்.  டிக்கட் வந்த போது அவரிடம் கேட்டேன், ரிட்டன் டிக்கட் அனுப்பவில்லையே நீங்கள்? நீங்கள் இங்கே வந்த பிறகு சாவகாசமாகப் போட்டுக் கொள்ளலாம் சாரு. 2010 டிசம்பர் 31.  ஹைதராபாத் … Read more

சாருவின் படைப்பின் நோக்கம்: நிர்மல்

சாருவின் படைப்புகளுக்கு நோக்கம் எதுவும் இல்லை என்றும், அதிர்ச்சி அளிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கக் கூடும் என்றும் பலர் கருதுகிறார்கள். இது குறித்து என்னுடைய சில புரிதல்களைக் கோர்த்துள்ளேன். தனி மனித விடுதலை என்பது ஒருவரின் ஈகோவைக் கடப்பது மட்டுமல்ல, மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தத் தூண்டும் உணர்விலிருந்தும் விடுபடுவதுதான். நம் அடையாளம், அறிவு, அழகு, செல்வம், சமூக அமைப்பு, அரசு, அதிகாரங்கள், பதவி, உறவுகள் என இவைகள் மூலம் நாம் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாக … Read more