விருது பற்றி…

விருது பற்றி பலரும் எழுதி விட்டார்கள். எதற்குமே எதிர்வினை காட்டாத காயத்ரியே எழுதி விட்டாள். எல்லாவற்றிலும் ஆகப் பிடித்ததாக வளன் அரசு எழுதியதைச் சொல்வேன். ஏனென்றால், அவன் என்னை மிக அரிதாகவே சந்தித்திருக்கிறான். ஒருமுறை என் வீட்டுக்குக் கீழே வந்து நின்று கொண்டு கீழே வாருங்கள் அப்பா என்றான். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு முந்தின நாள்தான் நான் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு காலை ஒன்பது மணிக்கு வந்திருந்தேன். வீடே அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. … Read more

குடியும் விருதும்

கீழே காணும் கவிதையை டார்ச்சர் கோவிந்தனுக்கு அனுப்பினேன். கேவலம் கேவலம், இதெல்லாம் ஒரு கவிதையா என்றார். ஐயோ, நீங்கள் எழுதியதிலேயே சிறந்த கவிதை இதுதான் என்று —————————சொன்னாரே என்றேன். (டேஷில் ஒரு கவிஞரின் பெயர்) உங்களுக்கு ஜால்ரா கூட்டம்தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து இதை வெளியிடாதீர்கள் என்றார் மீண்டும் டார்ச்சர். டார்ச்சர் சொல்வதையெல்லாம் கேட்டால் நான் மைலாப்பூர் மாமா மாதிரிதான் ஆவேன். அதனால் மேற்படி கவிதையை இங்கே வெளியிடுகிறேன். எனக்கு ஒரு விருது கிடைத்ததுவிழாவுக்குப் போகும்போது குடித்து விட்டுப் … Read more

மலக்கரைசல்

ஒரு காலத்தில் மலத்தைக் கரைத்து தலித்துகளின் வாயில் ஊற்றுவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அப்படி நடந்த சம்பவத்தை நாம் அறிந்தோம். இலக்கியத்திலும் அப்படி அவ்வப்போது நடப்பதுண்டு. ராசேந்திர சோழனின் இசைவு என்ற கதை அப்படிப்பட்ட மலக் கரைசல்தான். அம்மா வந்தாள் நாவலில் மகன் தன் வேத பாடத்தை முடித்து விட்டு பல ஆண்டுகள் கழித்துத் தன் வீட்டுக்கு வருவான். அங்கே ஊஞ்சலில் ஒரு மாமா ஆடிக் கொண்டிருப்பார். மாமா என்பான். டேய் உன் தம்பிடா என்பாள் … Read more

விருதும் வாழ்த்தும்…

டியர் சாரு, விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு இந்த ஆண்டு அளிக்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை வாட்ஸப்பில் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் உங்கள் ப்ளாகில் இதற்காக உங்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவிக்காத சில நண்பர்கள் பற்றி வருத்தப்பட்டு அதெல்லாம் நாடக நட்பு என்று வர்ணித்திருந்தீர்கள்.  நீங்கள் இப்போது இருக்கும் உயரத்தில் இது பற்றியெல்லாம் மனதில் எடுத்துக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  யார் வாழ்த்து அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்ன என்ற மனநிலையில்தானே நீங்கள் இப்போது இருக்க வேண்டும்?  மற்ற … Read more

பாண்டிச்சேரி சந்திப்பு: அராத்து

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்பது ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு வட்டம் அல்ல. இன்னும் கேட்டால் , சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்ற ஒன்றே இல்லை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் , சாரு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு வேலையை எடுத்துச் செய்யலாம் , எப்போது வேண்டுமானாலும் அதை அப்படியே கைவிட்டு விட்டு சென்று விடலாம். நான் ஓரிரு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். வேறு பல வேலைகளாலும் அலுப்பாகவும் இருந்ததால் இப்போது எந்த ஒரு வேலையும் … Read more

ஒரு சனிக்கிழமை இரவு

வினித் ஒரு டீட்டோட்டலர்.  மது அருந்தியதே இல்லை.  அருந்தப் போவதாகவும் இல்லை.   ஆனால் அவரை வாரம் ஒருமுறையாவது எங்காவது ஒரு பப்பில் பார்க்கலாம்.  ஏதாவது ஒரு குளிர்பானத்தை அருந்தி விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்.  டான்ஸ் அவருக்குப் பிடிக்கும்.  டான்ஸ் ஆட பப்தான் ஒரே இடம் என்பதால் அங்கே போகிறார்.  குடி, பப் இரண்டின் தொடர்பும் விடுபட்டுப் போனதால் வினித் பப்புக்குப் போகலாம் என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சென்ற சனிக்கிழமை.  டென் டௌனிங்கில் ஆண்கள் மட்டும் … Read more