மிஷ்கினுக்கு வாழ்த்து

முந்தாநாள் மிஷ்கினிடமிருந்து ஃபோன். செப்டம்பர் இருபது மிஷ்கினுக்குப் பிறந்த நாள் என்று எனக்குத் தெரியும். வாழ்த்து சொன்னேன். பத்தொன்பது இரவு மஹாபலிபுரத்தில் கொண்டாட்டம், வந்து விடுங்கள் என்று அழைத்தார். நானும் நேற்று இரவு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேற்று மாலைதான் பாண்டிச்சேரியிலிருந்து திரும்பியிருந்ததால் உடனடியாகக் கிளம்ப முடியாத குடும்பச் சூழல். அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன், இறை சக்தி அனுமதித்தால். இன்று பிறந்த நாள் காணும் மிஷ்கினுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விருது: கடிதம்

அன்புள்ள சாரு நிவேதிதா சார்,                            உங்களுக்கு விஷ்ணுபுரம் விருது  கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உங்களையும், ஜெயமோகன் சாரையும் படிக்கும் எளிய வாசகர் கூட கணித்து விடக் கூடியதாகவே இருந்தது. ஆனால் எந்த வருடம் என்பதைத்தான் யாராலும் யூகிக்க முடியவில்லை. விஷ்ணுபுரம் விருது தரமான எழுத்தாளர்களை முன்வைப்பது. அது உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். மற்றும் நீங்களும் ஜெயமோகன் சாரும் … Read more

குகை வாழ்க்கை

அன்புள்ள சாருவுக்கு, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இப்போதும்கூட எழுத வேண்டுமென்று தோன்றியதற்குக் காரணம் உண்டு. பதினைந்து வருடங்களாக நான் உங்கள் வாசகி. ஆரம்பித்தில் சுஜாதா என்னுடைய அலமாரியை நிறைத்தவர். பிறகு ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என வாசித்துவிட்டு ஒருசில கதைகளுடன் நிறுத்திவிட்டேன். தமிழிலக்கியத்தில் நான் கேள்விபட்ட முதல் அழகான புனைப்பெயர் உங்களுடையது. அதன் வசீகரம் அப்படி. எங்கோ எதிலோ உங்கள் பெயர் என்னை சற்று நிறுத்தியது.  உங்கள் புத்தகங்களை வாங்கி வாசித்தேன். … Read more

பாறை

அடிக்கடி ஜெயமோகனை முன்னுதாரணமாகக் காண்பித்துக் கொண்டிருப்பார் என் ஆருயிர் நண்பர் ஒருவர்.  நிறைய மதிப்பெண் வாங்கும் பக்கத்து வீட்டுப் பையனை அடிக்கடி உதாரணம் காட்டும் ஓர் உன்னதத் தாயின் மனநிலையிலேயே இருப்பவர் அந்த நண்பர் என்பதால் அவர் சொல்வது எதையும் நான் காதில் போட்டுக் கொள்வதில்லை.  இருந்தாலும் அவரது பேரன்பின் காரணமாக அவரும் சொல்வதை நிறுத்துவதில்லை.  அப்படி அவர் சொல்லும் ஒரு விஷயம், ஜெயமோகன் ஒரு பாறை மாதிரி.  அவர் யார் கருத்தையுமே கேட்க மாட்டார்.  அவர் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு வந்து சேர்ந்து விட்டது. கையெழுத்திட்டு பதிப்பகத்திடம் கொடுத்து அவர்கள் அதை குரியர் செய்ய வேண்டும். உங்கள் கைகளுக்குக் கிடைக்க இரண்டொரு தினங்கள் எடுக்கும். இதுவரை எனக்கு முகவரி தராத நண்பர்கள் உடனடியாக முகவரியை அனுப்பித் தாருங்கள். charu.nivedita.india@gmail.com