சினிமாவும் சுவாரசியமும்

ஜனரஞ்சகக் கதைகளோ அல்லது ஜனரஞ்சக சினிமாவோ எப்படித் தொடங்க வேண்டும் என்பதற்குக் கதையிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஒவ்வொரு உதாரணம் தருகிறேன்.  தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் வரும் கதைசொல்லி, ”இன்று இரவுக்குள் என்னைக் கொன்று விடுவார்கள், அதற்குள் நான் என்னுடைய நெடிய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்” என்று ஆரம்பிக்கிறான்.  எடுத்த எடுப்பிலேயே நம்மைத் தொற்றிக் கொள்கிறது சுவாரசியம்.  கதைகளில் கூட இந்த அம்சம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் சினிமாவிலோ நாடகத்திலோ இது இருந்தே ஆக வேண்டும்.  … Read more

ஒரு வாக்குவாதம், ஒரு வேண்டுகோள்…

டார்ச்சர் கோவிந்தனிடம் நேற்று நான் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததை மறைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நேற்று காலையே அவர் படத்தைப் பற்றி ஏகமாய்ப் புகழ்ந்திருந்தார். ஆனால் சினிமா தெரிந்த மற்ற சில நண்பர்கள் ரொம்பவும் எதிர்மறையாகச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் என்னதான் சொன்னாலும் அது எதுவுமே என்னை பாதிக்காது. எனக்கும் படத்துக்குமான உறவு ஒன்றுதான் நிற்கும். கமல்ஹாசனின் விக்ரம் படத்தையே நான் ஆஹா ஊஹூ என்று பாராட்டவில்லையா? பொழுதுபோக்குப் படம் … Read more

பொன்னியின் செல்வன் : மதிப்புரை

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது.  நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை.  தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம்.  ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள்.  என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை.  அப்படி ஒரு குப்பை.  ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை.  என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத் … Read more

பொன்னியின் செல்வன் டிக்கட் (ஒரு குறுங்கதை)

காலையில் எங்கள் குடியிருப்பு மேனேஜர் தன் குடும்பத்துக்காக நான்கு பொன்னியின் செல்வன் டிக்கட் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று என் பத்தினியிடம் கேட்டிருக்கிறார்.  மேனேஜரால்தான் என் அன்றாட வாழ்க்கை பளுவில் தொண்ணூறு சதவிகிதம் குறைகிறது.  நானாவிதமான கடைகளுக்குச் செல்வதிலிருந்து மின்வாரியம், ரேஷன் கடை என்று எல்லா அலைச்சல்களையும் செய்வது அவர்தான்.  பத்தினியும் தன் செல்வாக்கைக் காண்பிப்பதற்காகவோ அல்லது வேறு நல்ல எண்ணத்திலோ நான் சாருவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று மேனேஜரிடம் வாக்குக் கொடுத்து விட்டாள்.  … Read more

எனது நூலகம்

தியாகராஜா நாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன். இனி ஒரு வருட காலத்துக்கு அந்த உலகில்தான் இருக்க முடியும். என் நண்பர்கள் சிலர் தங்கள் நாவலை எழுத பத்துப் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்கள். எனக்கு அந்த லக்‌ஷுரி இல்லை. வயது 70. எனவே ஒரு ஆண்டில் முடித்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். இடையில் கட்டுரைகளில் காலம் கடத்தக் கூடாது. எழுதிக் கொண்டிருக்கும்போது ஏதோ புத்தகத்தை எடுக்கத் திரும்பினேன். அப்போது கண்ட காட்சியைப் … Read more

போல் தோ நா ஸரா (நடனம்)

ஆர்.ஆர். சபா என்று அழைக்கப்படும் ரசிக ரஞ்சனி சபாவில் இன்று மாலை ஐந்தரை மணிக்கு நான் கலந்து கொள்ளும் நடன விழா பற்றி எழுதியிருந்தேன். நடனம் தொடர்பான என்னுடைய ஒரு சிறிய குறிப்பு பின்வருவது. ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியது. போல் தோ நா ஸரா… – Charu Nivedita