நோபல்

அன்பின் சாரு! இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு Annie Ernauxவுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு இலக்கியம், வாழ்க்கை குறித்து அதிகம் பேசிய தாங்கள் இதைக் குறித்து ஏதும் சொல்லுங்களேன்… நன்றி கொள்ளு நதீம் ஆம்பூர். அன்பு நதீம், எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ரவிக்குமாரிடமிருந்து (விடுதலைச் சிறுத்தை) ஒரு தொலைபேசி அழைப்பு.  ”ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளருக்கு நோபல் அறிவித்திருக்கிறார்கள்.  அவர் எப்படி?” என்று கேட்டார்.  அப்போது நான் பாத்ரிக் மோதியானோ பற்றிக் கேள்விப்பட்டதில்லை.  ஃப்ராங்கஃபோன் … Read more

நான்தான் ஔரங்ஸேப்: புரவி இலக்கிய கூடுகை

வரும் பதினாறாம் தேதி ஓசூரில் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றிய மதிப்புரை சந்திப்பு நிகழ உள்ளது. அந்தத் தேதியில் நான் தாய்லாந்தில் இருப்பேன். அதனால் கலந்து கொள்ள இயலாது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். விலாசம் அழைப்பிதழில் உள்ளது.

உற்பத்தியும் சிருஷ்டியும்…

நேற்று (3.10.2022) அபிலாஷ் சந்திரன் எழுதிய ”ஒரு தலையுடன் வாழ்தல்” என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.  அபிலாஷின் கட்டுரைக்கான என் எதிர்வினைதான் இது.  சொல்லப் போனால் அபிலாஷ் எழுதியிருப்பதும் இப்போது நான் எழுதுவதும் ஒன்றேதான்.  அவர் தன் கட்டுரையை மனம் நொந்த நிலையில் எழுதியிருக்கிறார். புத்திசாலி வாசகர்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆரண்ய காண்டத்தில் வரும் காளையன் சொல்வார் அல்லவா, ”நமக்கு எங்கேடா நல்லது நடக்கப் போகுது?” என்று, அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் … Read more

ஒரு தலையுடன் வாழ்வது: அபிலாஷ் சந்திரன்

(என் நண்பர் அபிலாஷ் ஃபேஸ்புக்கில் எழுதியதை அவரிடம் அனுமதி கேட்காமல் இங்கே பிரசுரம் செய்கிறேன். ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். மிக முக்கியமான கட்டுரை. இது பற்றிய என் கருத்தை கொஞ்ச நேரத்தில் தனியாக எழுதுகிறேன். இப்போது பென் ஹர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு பென் ஹர் தான் உதவுகிறது. என்னைப் போல் பொன்னியின் செல்வனால் மன உளைச்சல் அடைந்த சிறுபான்மையினருக்கும் பென் ஹரையே சிபாரிசு செய்கிறேன்…) சாரு, ஏன் … Read more

தமிழ்ப்பிரபாவுக்கு ஒரு பதில்

”இது போன்ற ஓரிரு குறைகள் இருந்தாலும் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனாலும் அது பற்றி நான் அப்போது எழுதாததற்குக் காரணம், எழுத்தாளர்களெல்லாம் சினிமா இயக்குனர்களின் ஊழியர்களா என்ன என்ற கோபம்தான். நட்புக்காக எழுதலாம். தவறே இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட போது என் நட்பு வட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரபாவோ, பா. ரஞ்சித்தோ எனக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை. பெஸ்ட் … Read more

பொன்னியின் செல்வன் : மதிப்புரைக்கு ஒரு எதிர்வினை

சினிமா விமர்சனங்களிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று முடிவு எடுத்து ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. விமர்சனம் எழுதினால் அதன் விளைவாக சினிமா உலக நண்பர்களின் நட்பை இழக்கிறேன் என்பது உண்மைதான் என்றாலும் நான் சினிமா விமர்சனங்கள் எழுதாமல் இருப்பதற்கு அது காரணம் அல்ல. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். சினிமா மனிதர்கள்தான் இங்கே கடவுள்கள். ரஜினி ஒரு கடவுள், கமல் கடவுள், அஜித் கடவுள், விஜய் கடவுள், சூர்யா கடவுள், தனுஷ் கடவுள், இளையராஜா கடவுள்களின் கடவுள். இதுதான் … Read more