இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ்

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ் உரையாற்றுகிறார். நான் நன்றியுரை செய்கிறேன். இந்தச் சந்திப்பு தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நடைபெறுகிறது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறேன். கீழே லிங்க். https://us02web.zoom.us/j/9805204425

on this day…

வர்தா புயல் ஓய்ந்து, வீழ்ந்த மரங்களையும் இலை தழைக் குப்பைகளையும் தமிழகம் முழுவதிலிருந்தும் அழைத்துவரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மதியம், நானும் சாருவும் மயிலை Padrino-வில் சாப்பிட்டுவிட்டு அப்பு தெருவுக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தோம். ஒவ்வொரு சாலையிலும் தெருவிலும் போக்குவரத்து நெரிசல். வெர்னர் ஹெர்ஸாக் விசாரணையைப் பாராட்டி இருக்கிறாரே என சாருவிடம் கேட்டேன். “ஒரு ஐரோப்பியன் இந்தக் குப்பைக் கூளங்களைப் பார்த்து ஆச்சரியப் படலாம். இதல்லவா ஊர் என்று வியக்கலாம். சினிமாவின் auteurs நம் … Read more

அந்நியன் (15)

கான்ஸெப்ஸியோன் செல்வதற்காக லித்தினும் அவரது ஒளிப்பதிவாளரும் சாந்த்தியாகோவின் எஸ்தாஸியோன் செந்த்ராலிலிருந்து (Estación Central) இரவு பதினோரு மணி ரயிலைப் பிடிக்கிறார்கள்.  இந்த ரயில்  நிலையம் எஃபெல் டவரை உருவாக்கிய குஸ்தாவ் எஃபெல் நிர்மாணித்தது என்பதால் இந்த ரயில் நிலையத்தில் யாருமே இனிமேல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற அளவில் இது ஒரு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  சீலேயில் பினோசெத்தின் ஆட்சியில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது.  யார் நடமாடினாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, … Read more

ஆவணப்படம்

எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைக் குறித்து நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் த அவ்ட்ஸைடர் படம் பற்றியும் அவ்வப்போது எழுதி வருகிறேன். அந்தப் படம் எடுக்கப்படும் கலாச்சார, அரசியல் பின்னணி பற்றியும் தொடர்ந்து நான் தினமும் எழுதி வருகிறேன். ஏன் சீலே? அப்படி ஒரு போராட்ட நிலம் உலகில் எங்கேயும் இருந்தது இல்லை. அப்படி ஒரு கலாச்சார சுரணை உணர்வு கொண்ட மனிதர்கள் உலகில் எங்கேயும் இல்லை. எத்தனை கொடுமையான வறுமையிலும் தன் சுய … Read more

நான்தான் ஔரங்ஸேப்: நூல் அறிமுகம்: ஆர். அபிலாஷ்: ஞாயிறு இரவு எட்டு மணிக்கு

நாளை இரவு எட்டு மணிக்கு ஸூம் மூலம் ஆர். அபிலாஷ் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றி உரையாற்றுகிறார். நானும் பேசுகிறேன். முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

த அவ்ட்ஸைடர் (14)

படப்பிடிப்பு வேலையெல்லாம் முடிந்து எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லாமல் ஜாலியாக பாங்காக் நகரில் இரவுக் கொண்டாட்டங்களுக்குப் பேர் போன காவோ ஸான் சாலையில் நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் ஒரு பப்பில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் நான் சீலே, அயெந்தே, விக்தர் ஹாரா என்று ஆரம்பித்த போது, ”இந்தக் கொண்டாட்டமான இரவில் அம்மாதிரி சீரியஸ் விஷயங்களெல்லாம் எதற்கு, நம் நாட்டிலும் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் சாரு” என்று சீனி சொன்னதை நான் மறக்கவே மாட்டேன் என்று நினைக்கிறேன்.  … Read more