தீண்டாமை

தீண்டாமை பற்றி யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட தலித் மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கரைத்து விட்ட கொடுஞ்செய்தியையும் அறிந்தோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கொடுமை தீண்டாமை. அந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வருவதற்கு சமூகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தீண்டாமை என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. உலகின் பல்வேறு சமூகங்களில் தீண்டாமை இருந்திருக்கிறது. முக்கியமாக, ஆஃப்ரிக்காவிலும் … Read more

றியாஸ் குரானா: இலங்கையிலிருந்து ஒரு மாற்றுக் குரல்

நான் எந்த ஒரு எழுத்தாளரையும் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய பெரும்பாலானவற்றைப் படித்து விட்டுச் செல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போது இலங்கையில் வசிக்கும் நண்பர் றியாஸ் குரானாவை சந்திக்கப் போகிறேன். அதனால் அவர் எழுதிய அனைத்தையும் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவருடைய ஒரு நேர்காணல் இது: ”தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் … Read more

நிலவு தேயாத தேசம் குறித்து…

வணக்கம் சாரு ஐயா, நிலவு தேயாத தேசம் வாசித்து முடித்து விட்டேன்.  இந்த நூலை வாசித்ததன் மூலம் எனக்கு ஏற்பட்ட புரிதல்களில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நான் வாசித்த நூல்களிலே மதிப்புரை இல்லாத நூல் இதுவே. மதிப்புரைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்காது.  புத்தகத்தை வாசிக்கும் முன்னரே மதிப்புரையை வாசித்தால் அதை எழுதியவரின் பார்வை ஆழ்மனதில் பதிந்து விடும் என்று வாசிக்க மாட்டேன். இந்த நூலில் மதிப்புரை இல்லாதது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த … Read more

சில குறிப்புகள்

நான் சில காலமாக அமைதியாக இருப்பதன் காரணம், மிக முக்கியமான காரியம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதுதான். இடையில் ஒருநாள் ராம்ஜி மற்றும் காயத்ரியுடன் நிர்வாணா என்ற உணவகத்துக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தேன். இருவரையும் சந்தித்து, இருவரோடும் உணவு உண்டு ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் செல்லலாம் என்ற முடிவில் இருந்தோம். அப்படியானால் இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம் என்று நினைத்தேன். இரண்டு கிளாஸ் அருந்தினால் வீட்டில் தெரியாது. அதற்கு … Read more