சர்ப்பயா என்ற கே.கே. பற்றி…

இலங்கைக்கு ரொம்பவும் எதேச்சையாகத்தான் சென்றேன்.  மிக மிகத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்.  றியாஸ் குரானா அழைத்திருக்காவிட்டால் என் ஆயுள் முழுவதுமே நான் இலங்கை செல்வதற்கான வாய்ப்பே இல்லை.  ஏனென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள் அல்ல.  இரு சாராருமே தமிழ் சினிமா என்ற அசிங்கத்தின் ரசிகக் குஞ்சாமணிகள்.  இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களோ புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.  உள்ளூரில் எழுதுபவர்களெல்லாம் மு.வ. காலத்து ஆட்கள்.  அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதற்கெல்லாம் மு.வ. காலத்திலேயே … Read more

அல் பச்சீனோ

நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது?  இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை.  நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை.  ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள்.  … Read more

நண்பர்களின் கவனத்துக்கு…

இப்போது நான் எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி இன்னும் சில நாட்களில் விரிவாகவே எழுத இருக்கிறேன். நான் கடந்த மூன்று மாதங்களாக மிகக் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். மலச்சிக்கல் என்றால் நான்கு தினங்கள் கூட மலம் வெளியேறாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதி. அதோடேயேதான் ஸ்ரீலங்காவும் சென்று வந்தேன். ஆச்சரியத்துக்குரிய வகையில் ஆயுர்வேத மருந்தும் காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தற்செயலாக அறிந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. பாஸ்கரன் … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல… எழுதியவர்…

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல…

பெட்டியோ… நாவலை எழுத எழுத அத்தியாயம் அத்தியாயமாக ஸ்ரீராமுக்கும் ஸ்ரீக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இன்று அனுப்பிய அத்தியாயம் பற்றி ஸ்ரீராம் எழுதியது இது: நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை போலவே இருக்கிறது. சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல… சமஸ்கிருதப் பாடலைப் போல… உள்ளடக்கம் மிக அருமை. வாசகர்களுக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமாக இருக்கும். கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் கொண்டாடுவார்கள்.