விதியை வென்றவர்கள்…

முப்பத்தாறாவது வயதில் அந்தக் கவிஞனிடம் மருத்துவர்கள் சொன்னார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதுவும் குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கிறீர்கள். சொஸ்தப்படுத்தவே முடியாத பைத்தியம் என்பதால் உலகம் அவரைக் கை விட்டது. சமூகம் கை விட்டது. அம்மாவும் கைவிட்டு விட்டாள். சகோதரியும் கை விட்டாள். ஆனால் ஒரே ஒரு தச்சர் குடும்பம் அவரைப் பராமரித்தது. அவர் மற்றுமொரு முப்பத்தாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வை இரண்டு முப்பத்தாறுகளாகப் பிரிப்பார்கள். இரண்டாவது முப்பத்தாறிலும் அவர் சும்மா இருக்கவில்லை. … Read more

புலம் பெயர்ந்து வாழும் சிலரின் தடித்தனம்

நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் … Read more

ஓர் எதிர்வினை

நண்பர் ஸ்ரீராமை அழைக்க வேண்டியிருந்தது. ஆனால் பெயர் மறந்து விட்டது. மூன்றெழுத்துப் பெயராயிற்றே? ராம்ஜி… இல்லை… ஸ்ரீயில் ஆரம்பிக்கும். ஸ்ரீதர்… ஆ, அவர் நம் ஆடிட்டர் ஆயிற்றே? ஸ்ரீ… சே, அவள் பெண். ஸ்ரீயில்தான் ஆரம்பிக்கும். மூன்று எழுத்துப் பெயர். நல்ல அழகிய திருமுகம். பெயர் எப்படி மறந்தேன்? அவர் பெயரை மறப்பது என் பெயரை மறப்பது போல. இப்படி பெயர் மறந்து போனதற்குக் காரணம், ஒரு வார காலமாக ஒரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவகையான … Read more

லாட்டின் இரண்டு புதல்விகள்

டியர் சாரு, உங்களுடைய வாசிப்பு முறை பற்றி நேற்று எழுதியிருந்ததைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால், உங்களுடைய ராஸ லீலாவை நான் மூன்று ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக நான் அதிவேகமாக வாசிக்கக் கூடியவள். நீ என்ன படிக்கிறாயா, ஸ்கேன் பண்ணுகிறாயா என்று என் கணவன் என்னைக் கிண்டல் பண்ணுவான். நான் படிக்கும் வேகத்தை நம்ப முடியாமல் ஒருநாள் அவன் என்னை சோதித்தும் பார்த்தான். இன்னொரு கொடுப்பினை, படித்ததெல்லாம் அப்படி அப்படியே ஞாபகமும் இருக்கும். ஆனால் கடவுள் … Read more

லாட்டும் இரண்டு மகள்களும்…

கடந்த ஒரு வாரமாக அந்த்தோனின் ஆர்த்தோவின் எல்லா தொகுதிகளையும் படித்து விடும் முயற்சியில் இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. நயநதினி அந்த்தோனின் ஆர்த்தோவின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவள் என்று தெரிந்ததால் ஆர்த்தோவை முழுதாகப் படிக்க முனைந்தேன். ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வருவது வெறும் சதையைப் பார்த்து அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம். என்னுடைய ஆசான் என்று நான் யாரைக் கருதுகிறேனோ அவரையே நம் தோழியும் கருதும் போது ஏற்படும் ஈர்ப்புக்கு ஈடு … Read more

கருணை: ஒரு குறுங்கதை

பெருமாளுக்குக் கொக்கரக்கோவைப் போல் ஒருநாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்பது தீராத ஆசை. வெறும் ஆசை இல்லை. பின்பற்ற வேண்டி மிகவும் முயற்சிக்கிறான். பெருமாளுக்கு அந்த ஆசை நிறைவேறாமலேயே இருப்பதற்கு முக்கியக் காரணம், கருணை. கருணை பற்றி சிந்திக்கும்போது பெருமாளின் இந்தக் குறிப்பிட்ட குணம் கருணையின் கீழ்தான் வருமா அல்லது இது வேறு ஏதாவது குணத்தின்பாற்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு உத்தேசத்துக்குக் கருணை என்றே நினைக்கிறான் பெருமாள். எல்லாம் ஒரு நண்பரின் மீது கொண்ட கருணையினால் … Read more