ஒரு நியூயார்க்கர் கதையும் ஸீரோ டிகிரியும்

செப்டெம்பர் 28, 2016 என் எழுத்துக்களின் மூலம் நான் ஒழுங்கற்றவனைப் போல் தெரிந்தாலும் கடும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன். என்னோடு பழகியவர்களுக்கு அது தெரியும். அது நல்லதோ கெட்டதோ, இப்படி ஒழுங்கைக் கடைப்பிடிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. அதனால் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான் அறம் என்றெல்லாம் உளற மாட்டேன். ஒருவர் ஒழுங்கற்று இருப்பதுதான் அவருக்கு வசதியாக இருந்தால் அது அவரைப் பொறுத்தவரை நல்லதுதான். சரி, அப்படி நான் கடைப்பிடிக்கும் ஒழுங்குகளில் ஒன்று, ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்தால் அதை முடித்து … Read more

அனுஷுக்கு ஒரு கடிதம்

செப்டெம்பர் 29, 2016 அனுஷின் கடிதத்தைப் படித்தேன். நான் எழுதும் கருத்துக்கள் மிகை உணர்ச்சியின் குவியல்கள் என்று எழுதியிருக்கிறார். நன்றி. நான் எழுதியது ஒரு எச்சரிக்கை. என் கருத்தைப் பொருட்படுத்துவதும் தூக்கிக் குப்பையில் எறிவதும் உங்கள் விருப்பம். நான் எழுதியது எதிர் பதிப்பகத்தின் நோக்கத்தைப் பற்றியது அல்ல. தவறு செய்பவர்கள் பொறுப்பற்ற முறையில் மொழிபெயர்ப்பவர்களைத்தான். அர்ஷியாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. தலைப்பே அந்த நாவலின் அடியோட்டத்துக்கு எதிராக இருந்ததால் அதை நான் படிக்கவில்லை. ஆனால் … Read more

“பிரபஞ்ச பிரதிவினை”

செப்டெம்பர் 27, 2016 எதிர் பதிப்பகத்தின் அனுஷ் தங்கமான இளைஞர். என் நண்பர். என்னுடைய நாவல் எதிர் மூலமாகத்தான் வர வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. எதிர் பதிப்பகத்தின் புத்தகத் தயாரிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனாலும் எதிர் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை இனிமேல் வாங்குவதில்லை என்று மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் சந்நிதியில் இன்று சத்தியம் செய்தேன். வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் கண் முன்னே என் தமிழ் வன்கலவி செய்யப்படுவதைப் பார்த்து ரத்தம் … Read more

இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஒரு விஞ்ஞானி

செப்டெம்பர் 27, 2016 எழுத்தாளர்களெல்லாம் அடித்துக்கொள்கிறார்கள் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் யாரும் இலக்கியம் படிக்காமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என்று சொல்லி, உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்; ஒருநாள் நீங்கள் ப்ரஸீல் போகலாம் என்று ஒரு பிரபல விஞ்ஞானி எனக்கு அருள் வாக்கு சொன்னார். இன்றைய இந்துவில் வந்திருந்தது இது: இளையராஜா அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கே சிலர், ஏ.ஆர். ரஹ்மான் உங்களிடமிருந்து இசையைத் தொடர்கிறார்; அவர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க அதற்கு … Read more

ரெண்டு தஞ்சாவூர்க்காரன்கள் – குறுங்கதை

செப்டெம்பர் 25, 2016 ஒருத்தன் இன்னொருத்தனைத் தேடி வந்தான். இன்னொருத்தன் தன் பூனைக்கு தோட்டத்தில் வைத்து மீன் போட்டுக் கொண்டிருந்தான். ரெண்டு கையிலும் மீன். பூனை சாப்பிட நேரமாயிற்று. அவனோடு கொஞ்சிக் கொண்டும் மிஞ்சிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஊடே ஊடே ஏதாவது பெரிய மிருகம் வந்து தன் வாயிலிருக்கும் மீனைப் பிடுங்கிக் கொள்ளுமோ என்ற சந்தேகத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளவும் செய்தது. தனக்குப் பிரியமான இந்த மனிதன் நிற்கும் போது எந்த மிருகமும் குறுக்கே வர … Read more

ஞானக்கூத்தன்: பாரதிக்குப் பிறகு தோன்றிய மகத்தான கவிஞன்

ஜூலை 23-ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் ஞானக்கூத்தனைப்போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.  காரணம் , சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் ஒரு சமஸ்கிருத பாடலில் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களைப் பார்க்க  நேரில் வருகிறேன் என்று சொன்னபோது, “இல்லை , இல்லை . நான் உங்களைப் பார்க்க வருகிறேன்,” என்று சொன்னார். இந்த அடக்கம் ஞானக்கூத்தனுக்கே உரிய தனிப்பண்பு . ஆனால் அந்த அடக்கமே ஞானக்கூத்தனை தமிழ் சமூகம் … Read more