ஆண்டவன்

அரசன் படிக்காத மேதைமேதைகளின் புதிர்வார்த்தைகளில் மந்திரம் தீட்டுபவன்எங்கே மனிதர் துயருறுகிறாரோஅங்கே தோன்றி விண்ணைத் தொடுகின்றான்.தீயோரை வதைத்து தர்மத்தை உயர்த்துகின்றான்நல்லோரைத் துதித்து நம்பிக்கை பொழிகின்றான்குருதியைப் பாலாக்கி சிறார்க்கு அளிக்கின்றான்முதியோரை முதுகில் தாங்கிபுன்னகையை இறைக்கின்றான் நீதிமான் செல்வந்தனின் மைந்தனொருவன்ஏழைப் பெண்ணொருத்தியை வன்கலவி செய்துஇருளில் தள்ளினான்அரசும் பணமும் அதிகாரமும் கூடிவலியோன் பக்கம் வலுவாய் நின்றன.கலியில் இதுவே நியதி என்றார் மூத்தோர்அறம் வீழ்ந்ததென்று அரற்றினர் கற்றோர்எதிர்ப்பு காற்றில் கரைந்து மறைந்ததுஅப்போது தோன்றினான்—நம் நாயகன்!வலியோனையும் வலியோனைத் தாங்கிய ஆயிரம் பேரையும்ஆயுதமேங்கி அழித்தான் அழகன் அழகிகளின் … Read more

கூழாங்கல் அல்ல, வைரம்…

என்னுடைய சிறந்த மாணவர்கள் என்று சீனியையும் ஸ்ரீயையும் சொல்ல வேண்டும்.  இவர்கள் இருவரும் என்னிடம் நேரடியாகக் கற்றவர்கள்.  வளன் தொலைவிலிருந்து கற்றவன்.  அவனுக்கு நான் வால்டன் பற்றியும் அதை வாழ்ந்து எழுதிய ஹென்றி டேவிட் தோரோ பற்றியும் கற்பித்த போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன்.  அப்போது அவன் கனவில்கூட கண்டிருக்க மாட்டான், பதினைந்து ஆண்டுகளில் அவன் வால்டனில் அமர்ந்து தோரோவையும் சாருவையும் நினைத்துக்கொண்டிருப்பான் என. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று பாதிரியாராக இருக்கும் ஒருவர் … Read more

கைகளில் அடங்கிய பேரண்டம்

’உச்சக்கட்ட இன்பம் எது?’ ’பத்து பூனைகள், பத்து பெயர்கள்.லக்கி, டெட்டி, ஸிஸ்ஸி, கெய்ரோ,குட்டி கெய்ரோ, டைகர், ப்ரௌனி,வெல்வெட், ச்சிண்ட்டூ, ச்சோட்டூ.ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு உலகம் ச்சோட்டூ மடியில் ஏறுகிறதுகுட்டியான உரோமக் குவியலாக,மென்மையாக முணுமுணுத்தபடிஎன் மடியில் அமைதியாக உறங்குகிறது.’ ’உச்சக்கட்ட துயரம் எது?’ ‘ஸிஸ்ஸி டைகரைத் துரத்துகிறது,குரல்வளையைக் குதற முயல்கிறது.டைகர் டெட்டியை விரட்டுகிறது,டெட்டி ச்சோட்டுவை மிரட்டுகிறது.’

லயம்

அதிகாலைப் பறவைகள்உத்தரவின்றிப் பாடுகின்றன,காற்றில் இலைகள் அசைகின்றனசூரியன் உதிக்கிறது, மறைகிறது,நிலவு தேய்கிறது, வளர்கிறது,இயற்கை தன் தாளத்தில் ஆடுகிறது.பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்,அல்லதுஹெலிகாப்டரில் திருமணம் செய்யலாமா என்கின்றனர்உயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றனமனிதர்கள் பணத்தைத் துரத்துகிறார்கள்,அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள்புகழின் மீது மயங்குகிறார்கள். ஆண்கள் பெண்களைத் தேடுகிறார்கள்ஆண்களும் பெண்களும் பால்பேதமில்லாமல்காதல் தோல்வியில் மனம் உடைகிறார்கள்உறக்கமின்மையில் உயிர் துவள்கிறதுவெறுப்பில் கொலைகள் பிறக்கின்றன.காமம் வெறியாகி வன்கலவியில் முடிகிறதுமற்றவர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள்நோயில் வாடுகிறார்கள்நோய் முற்றிச் சாகிறார்கள்மகிழ்ச்சியில் நடனம் பிறக்கிறதுஇன்பத்திலும் துன்பத்திலும் பாடல் ஒலிக்கிறது. நாய் நன்றி நவில்கிறதுபூனை துயரத்தில் … Read more

Transgressive artஉம் காமா சோமா கத்துக்குட்டிகளும்…

தக் லைஃப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் பற்றி நான் எழுதியதை ஏதோ ஒழுக்கக் கேடு என்று நான் எழுதி விட்டதாக சில எழுத்தாளக் குஞ்சுகள் ஃபேஸ்புக்கில் நூல் விட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். சினிமாக்காரர்களுக்கு ப்ளோஜாப் செய்து விட வரிசையில் நிற்கும் அந்த எழுத்தாளக் குஞ்சுகளுக்கு நான் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒழுக்கம் அல்ல நான் குறிப்பிட்டது. ஒரு கதாபாத்திரம் அப்பனுக்கும் ஆசைப்படுகிறது, மகன் மீதும் ஆசைப்படுகிறது என்றால் அதற்கான characterization இருக்க வேண்டும் என்பது மட்டுமே நான் சொன்னது. … Read more

ஒரே ஒரு மொளகா பஜ்ஜி

1. எழுத்தைக் கற்பித்தவன்அறுபத்தைந்து ஆண்டுகள் எழுதியவன்.சிறுகதை, நாவல், கட்டுரை—ஆங்கிலம் சரளமாய்த் தெரிந்தாலும்தமிழில் மட்டுமே எழுதினான்.ஐநூறு பேர் படித்தால் அதிகம்.அந்த ஐநூறில் நானொருவன்.இருபத்தைந்து ஆண்டுகள்சினிமா தயாரிப்பில் மேலாளர் ஒருநாள் முதலாளிகார் துடைக்கச் சொன்னபோது,’நானொரு எழுத்தாளன்!’ என்று முணுமுணுத்தான்’எழுத்தாளனென்றால் நீ இங்கேயா இருப்பாய்?’என்று சிரித்தார் முதலாளிஅக்கணமே வேலையை உதறினான் ஐநூறு பேருக்கு எழுதும் வேலைசோறு போடாதுஇவன் பேரும் தியாகராஜன்ஆனால் உஞ்சவிருத்தி செய்யவில்லைஇக்காலத்தில் அது பழக்கமில்லைபழக்கத்தில் இருந்தாலும் கேட்டிருக்க மாட்டான்தன்மானம் மிகுந்தவன்யாசகம் கேட்க அடையாளம் துறக்க வேண்டும்அரிசியில்லாத நாட்கள்ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க … Read more