அப்படியா?

சீதாராம் கேசரி, காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்ஏன் என் கனவில் தினசரி வருகிறார்?அவருக்கும் எனக்குமென்ன சொந்த பந்தம்?இத்தனைக்கும் கேசரி எனக்குப் பிடித்தஇனிப்பு கூட அல்லகேசரி வளர்த்த நாய், மணிஅவர் இறந்ததுபோதுஅருகிலேயே அமர்ந்திருந்து கல்லாகிப் போனதுஅந்தக் கல் என் நெஞ்சில் இறங்கிதினமும் கனவில் வந்து பாரமாய் அழுத்துகிறது ஒரு டால்மேஷனைசரக்கு ரயிலில் அனுப்பி விட்டது ஒரு மனிதக் கூட்டம்வடநாட்டிலிருந்து வந்த ரயில்சென்னை செண்ட்ரலில் காப்பாற்றப்பட்டபோதுஅதன் கண்கள் என் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டன. இப்படி ஒன்றா இரண்டாஒரு நூறு கதைகளுண்டு இந்த … Read more

ஒரே ஒரு அதிசயம்

ஜூன் இறுதியில் கோவா செல்கிறேன்கூட்டமில்லை கொண்டாட்டமில்லைமழைகூட இல்லாத பருவம்மதுபான விடுதிகள் வெறிச்சோடி நிற்கும்இப்படிகோவாவே தனிமையில் மூழ்கி இருக்ககடல் மட்டும் நீலம் மாறாமல்அலைகளின் மொழியில் அதிசயம் பேசும்

சில குறுங்கவிதைகள்

1. ’குடித்தால் உங்கள் மகன்அழுகிறான், சின்ன வயதில்அடித்தீர்களாம்’என்றாள் மருமகள். இப்போதெல்லாம் குடித்தால்நானும் அழுகிறேன். 2. கடும் பணத்தேவைநண்பனை அழைத்தால்ஐந்து லட்சம் வரலாம்வராமலும் போகலாம்அழைக்கவில்லை. 3. சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைபாங்கு சத்தம் கேட்கிறது. 4. கவிதை, கலவி – சொற்கள் தொட மறுக்கும், மௌனம் பேசும். 5 மேகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீரோவியங்கள் உருமாறுகின்றன

கவிதைத் தொகுப்பு

என்னுடைய கவிதைத் தொகுப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. பாதி அளவுக்கு திருத்தம் செய்து விட்டேன். கவிதை பற்றிய என் விளக்கம் எதுவும் தொகுப்பில் இருக்காது. ஆத்மார்த்தி மற்றும் நேசமித்ரனிடம் முன்னுரை கேட்டிருக்கிறேன். இருவரும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்தவர் எப்போதும் போல் ஸ்ரீராம்தான். 2022இலிருந்து 21.4.2025 வரை எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. ஏப்ரல் இறுதியிலிருந்து இன்று வரை எழுதியதே தனித்தொகுப்பாக வரும் போல் இருக்கிறது. தினமும் இரண்டு மூன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். கவிதை என்றால், அப்படியே காற்றில் … Read more

உருமாற்றம்

பார்வையற்றவனுக்குப் பார்வையும்செவியில்லாதவனுக்கு செவியும்வாய் பேசாதவனுக்கு வாயும்மனம் பிறழ்ந்தவனுக்கு மனமும்நிதியற்றவனுக்கு நிதியும்மதியற்றவனுக்கு மதியும்கிடைத்தாற்போல் மகிழ்கிறேன் இப்போது என்னால்அணில் குஞ்சுகளிடமும்கிளி குயில் மைனா போன்ற பட்சிகளிடமும்மற்றும் இன்னோரன்ன பிராணிகளிடமும்விலங்குகளிடமும்தாவரங்களிடமும்உரையாட முடிகிறதுஒருநாள் தேன்சிட்டுமலரில் தேனுண்ணும்ஒலியைக்கூட கேட்க முடிந்தது இன்னொரு நாள்கரையான் கூடுகளில் கரையான்கள்மண்ணில் புரியும்மௌன உழைப்பைக்காண முடிந்தது இதுவரைவெறும் சொல்லாகவே இருந்தஆன்மா என்பதும்இப்போது அருகில் வந்துஉரையாடுகிறது எல்லாவற்றையும்விட,முதுகில் குத்தி விட்டுமூச்சு வருகிறதா எனகை வைத்துப் பார்ப்போரைமன்னிக்க முடிகிறது

புதிர்

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மதுபானக் கூடம் எனக்குப் பிடித்தமானது திறந்த வெளி வேப் புகைக்கத் தடையில்லை கண்ணெதிரே நீச்சல் குளம் இறங்கிக் குளிக்கப் பிடிக்காது பார்க்கப் பிடிக்கும் எப்போது போனாலும் நீச்சல் குளத்தில் சிரித்த முகம் கொண்ட அந்த சிரிப்பு நடிகர் நீச்சலடித்தபடியே இருப்பார் அறுபது வயது என்கிறது விக்கிபீடியா முப்பது கூட சொல்ல முடியாது ஒருநாள் மாரடைப்பில் காலமானார்