இசை எனும் அற்புதம்…

நான் யோசித்து முடித்த பிறகே எழுதுகிறேன்.  அதுவும் யோசிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி யோசிப்பதில்லை.  என்னென்னவெல்லாம் எழுத வேண்டும் என்று மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவிந்திருக்கும்.  நேரம் கிடைக்கும் போது பேய் வேகத்தில் டைப் செய்வேன்.  ஒரு நொடி கூட யோசிப்பதில்லை.  விரல்களில் வலி எடுக்கும் அளவு வேகத்தில் டைப் செய்வேன்.  கூடவே இசை ஓடிக் கொண்டிருக்கும்.  எப்படிப்பட்ட இசை என்று பின்வரும் இணைப்பைக் கேளுங்கள்.  ஆத்மாவை வருடி விடும் இசை இது… … Read more

தமிழ் ஸ்டுடியோ நிகழ்ச்சிகள்

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2 சினிமா – புகைப்படக் கண்காட்சி நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை. இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எதிரில். தொடக்க விழா: மாலை 5 மணிக்கு.   ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும் காலை 10 மணிமுதல், இரவு 7 மணிவரை கண்காட்சி நடைபெறும்.  ———————————————— தொடங்கி … Read more

ஒரு கேள்வியும் பதிலும்

டியர் சாரு, ஓநாயும் ஆட்டுக் குட்டியும் பற்றி உங்கள் கருத்து என்ன? செந்தில், திருப்பூர். டியர் செந்தில், ஒரு முகநூல் எழுத்தாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா?  சர்வதேச அளவில் ஒரு எழுத்தாளன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறானோ, ஒரு எழுத்தாளன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.  தயவு செய்து  பொருளாதார ரீதியாக இதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் … Read more

the most sensuous song i ever heard…

எனக்கு பியானோ மிகப் பிடித்த இசைக் கருவி என்று எழுதியிருக்கிறேன்.  உலகின் sensuous பெண்களில் ஒருவரான Tori Amos தன்னுடைய மிக மிக மிக செக்ஸியான குரலில் பாடுகிறார். http://www.youtube.com/watch?v=HLL6ON18vGI  

இமயமலைப் பயணக் குறிப்புகள்: நாள் ஐந்து : கணேஷ் அன்பு

இணையத்தில் ஒருவர் இமயமலைப் பயணக் குறிப்புகள் என்ற பெயரில் கூகிளில் உள்ளதையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.  மொழிபெயர்ப்பும் நல்ல காரியம்தான்.  ஆனால் வரிக்கு வரி தகவல் பிழைகள்.  யாராவது திருச்சி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என்று எழுதுவார்களா?  அவர் ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தோம் என்று எழுதுகிறார்.  அதோடு இந்திய எல்லையையும் கன்னாபின்னா என்று மாற்றுகிறார்.  அப்படியில்லாமல் கணேஷ் அன்புவின் பயணக் குறிப்புகள் authentic ஆக உள்ளன. http://anbueveryone.blogspot.in/2013/09/5_28.html