கேள்வி பதில்

கேள்வி: ஜெயகாந்தன் பற்றிய சன் டிவி கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொண்டு பேசியதைக் கேட்டேன்.  அவரைப் பற்றிய உங்கள் கருத்தை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா? டாக்டர் ஸ்ரீராம், சென்னை. பதில்:  ஸ்ரீராம், நாலைந்து நாட்களாக நான் இந்த ஜெயகாந்தன் விஷயமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.  சன் டிவி நிகழ்ச்சியில் என் நண்பர் சொன்னதிலிருந்துதான் எனக்கு அந்த ஜானோதயம் ஏற்பட்டது.  ஆஹா, ஜெயகாந்தன் விலிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியிருக்கிறாரே, அது ஏன் என்னுடைய மந்த புத்திக்கு உறைக்கவில்லை … Read more

ஜெயலலிதா விடுதலை : கா. மார்க்ஸ்

முகநூலில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இதையே என் கருத்தாகவும் கொள்ளவும்.  அப்புறம் டிசம்பரில் என் புத்தக வெளியீட்டில் வந்து ஜெயலலிதா விடுதலை பற்றி சாரு எதுவும் சொல்லவில்லை, பயப்படுகிறாரா என்று புகார் சொல்லக் கூடாது.  இனி கார்ல் மார்க்ஸ்: கடந்த முறை ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட போது ”இந்த தண்டனைக்கு முற்றிலும் தகுதியானவர் ஜெயலலிதா” என்று சொல்லியிருந்தேன். எந்த டிவியில் என்று கேட்காதீர்கள். இதே முகனூலில்தான். இப்போது இந்த விடுதலைக்கும் அவர் முற்றிலும் … Read more

புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா காணொளி

டியர் சாரு… மிக மிக மிக மிக தாமதமான பணி இது. முதல் விஷயம் வேலையும் கொஞ்சம் டைட். இரண்டாவது விஷயம் , வேகம் குறைவான datacard இண்டெர்நெட் கனெக்‌ஷன். file size அதிகம் என்பதால் upload ஆக மணிக்கணக்கில் எடுத்துக்கொண்டது. சில நேரங்களில் hang ஆகி அப்படியே நின்றும் விட்டது. செல்வா  அலுவலகத்தில்  முயற்சித்தும் பயன் இல்லை. நேற்றுதான் அதிவிரைவு ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் புதியதாக எடுத்தேன்.  இன்று அப்லோட் செய்து விட்டேன். இரண்டு மாத தாமதத்திற்கான … Read more

அன்பின் பிரார்த்தனை (2)

அன்புள்ள சாரு, சாரு ஆன்லைனில் ”அன்பின் பிரார்த்தனை” படித்தேன். பதறிவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். இன்னும் நடுக்கம் குறையவில்லை எனக்கு. அடிப்படையில் வெறுப்பிற்கு எதிரான எதிர்வினையாகத்தான் அதை எழுதினேன். மிகவும் சாதாரண நெகிழ்ச்சிக் கட்டுரை ஒன்றில் ‘உங்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது’ என்று ஜெமோவுக்கு ரியாஸ் அஹமது சொல்லியிருந்ததை ”இன்று இந்த மனநிலையை கணிசமான இஸ்லாமியரிடம் காணமுடிகிறது” என்று அதை வெறுப்பு மனநிலையாக மாற்றியிருந்தார். இதற்கு பதில் சொல்லும் முகமாக ”நான் அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதக்கூடியவன்” என்றெல்லாம் ரியாஸ் பதில் சொல்லியிருந்தார். … Read more

அன்பின் பிரார்த்தனை

”நான் வெறுக்கும் பலரைப்போல் ஜெயமோகனையும் வெறுக்கிறேன். அவரை வெறுக்க எனக்குக் காரணங்களே தேவைப்படவில்லை. ஆயினும் நான் அவரை வெறுக்கிறேன். எந்த அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் எழுதியோ கண்டனத்தைப் பதிவு செய்தோ என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. காதலிப்பதைப்போல வெறுப்பதும் எனக்கு அந்தரங்கச் செயல்பாடு. ஏன் வெறுக்கிறாய் என்று கேட்பதும், காரணங்களை நீங்களே கற்பித்துக் கொண்டு இதற்காகத் தானே என்று என்னிடம் உறுதிப்படுத்த முயல்வதும் என் மீது நீங்கள் பிரயோகிக்கும் வன்முறை.” மேற்கண்ட குறிப்பை என் பிரியத்துக்குரிய … Read more

ஒரு சிறிய ஐரோப்பியப் பயணம்

வழக்கமாக இந்த நேரத்தில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடித்து விட்டு மஹாமுத்ராவில் காஃபி குடித்துக் கொண்டிருப்பேன்.  அல்லது, அதையும் முடித்து விட்டு பாபா கோவிலின் வெளியே நின்று கொண்டிருப்பேன்.  தேகத்தில் வியர்வை ஆறாய்ப் பெருகி ஊற்றிக் கொண்டிருக்கும் என்பதால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக உள்ளே செல்வதில்லை.  நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது.  தினமணி தொடருக்கு எழுதுவதற்காக ஒரு தமிழ் நாவலைப் படிக்க எடுத்தேன்.  முடித்த போது வெள்ளி முளைத்து விட்டது.  இப்படிப் படித்து பல காலம் … Read more