தம்ரூட்டை முன்வைத்து ஒரு நீதிக்கதை (சிறுகதை)

நீதிக்கதை என்றால் ஒரு பக்கம் ரெண்டு பக்கம் இருக்கும்.  ஆனால் தருண் தேஜ்பால் எழுதிய நீதிக்கதை அறுநூறு பக்கம்.  பெரிய சாதனைதான்.  அதுவும் ஒரு நீதிக்கதையை த்ரில்லர் மாதிரி சொல்ல வேண்டுமானால் அதற்கு பயங்கரமான திறமை வேண்டும்.  பல வாசகர்கள் இலக்கியம் என்றால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நாலு நல்லதைச் சொல்ல வேண்டாமா என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் நமக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாதபோது நம்மால் எப்படி … Read more

யார் அந்த மூன்று பேர்?

ஜெயமோகனின் ஓஷோ பற்றிய பேருரையில் ஓஷோ அளவுக்குப் பிரபலமான மூன்று தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறுகிறார். கிசுகிசுவில் நான் தான் ரொம்ப வீக். ஜெயமோகன் சொல்லும் கிசுகிசுக்களுக்கு க்ளூவே தர மாட்டார். சுத்தமாகத் தொங்கலில் நிற்கும். நான் தரும் க்ளூக்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாது என்றாலும் சில அசகாய சூரர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். இப்போது ஜெயமோகன் சொன்ன மேற்படி கிசுகிசுவால் காலையிலிருந்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். மூவரில் ஒருவரைக் கண்டு பிடிக்க முடிகிறது. அது … Read more

தம்ரூட் – சிறுகதை – மேலும் சில எதிர்வினைகள்

தருமபுரி, 12..03..21 சற்றே நீண்ட கடிதம். பொறுத்துக் கொள்ளுங்கள். அன்புள்ள சாரு, இக்கடிதம் பல நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது.  என்னுடைய 59 வயதில் நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். தங்களது வலைப்பக்கத்தில்தான் எனது நாள் துவங்குகிறது. இது எனது வழக்கம். சில நாட்களுக்கு முன்பாக வளனது கடிதத்தினைப் படித்தேன். அது அளித்த உந்துதலே இக்கடிதம். தங்களது எழுத்து யாருக்கு வாழ்வின் எப்பக்கத்தையெல்லாம் திறக்க வைக்கிறது என்பதற்கு வளனின் கடிதம் ஒரு சிறந்த உதாரணம். … Read more

தம்ரூட் சிறுகதை – சில எதிர்வினைகள்

ஸ்ரீராம், என் சிறுகதைகளைத் தொகுக்கும்போது அந்தக் கதைக்கு வந்த எல்லா எதிர்வினைகளையும் தொகுத்து விடுங்கள்.  தொகுப்போடு வந்தால் சரியாக இருக்கும்.  இன்னும் பல எதிர்வினைகள் வந்தன.  அவற்றில் அ. மார்க்ஸ் அவர் தளத்தில் எழுதியிருந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.  என்ன இருந்தாலும் பின்நவீனத்துவவாதி அல்லவா? * * * இன்று மாலை சாரு நிவேதிதாவின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  “நமக்கு வாய்த்தது” என்ற சிறுகதையில் சில வரிகள்: * * * “ஆனா அது ஒரு பெரிய வேலை.  அ. … Read more

ரத்தனங்கள் பற்றி ரத்தினம் சொன்ன கதை

இந்தக் கதைக்கு நான் a wonderful world of gems என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன.  சீனியிடம் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஆங்கிலம் கலவாமல் தமிழ் எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன்.  அல்லது சண்டை போட்டு வருகிறேன்.  என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், நான் மொழித் தூய்மைவாதி அல்ல என்று.  ஆனாலும் தேவையில்லாத இடங்களில் – அருமையான தமிழ் வார்த்தை இருக்கும் இடங்களில் கூட … Read more

நல்ல பேரை வாங்க வேண்டும், பிள்ளைகளே…

அன்புள்ள அப்பா, தம்ரூட் சிறுகதை வந்தவுடன் வாசித்துவிட்டேன். சமீபமாக உங்களுடைய சிறுகதைகள் அனைத்தும் – இதற்கு முன்பு எழுதியதும் – எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருக்கும். இந்தச் சிறுகதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வேலைப்பளு அதிகம். இப்போதுகூட இதை வகுப்புகளின் இடைவெளியில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய எழுத்துகளைக் குறித்து நான் சந்திக்கும் எல்லோரிடமும் உரையாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துகளை உங்களுக்கான துதிப்பாடல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் பூனைகள் குறித்தும் நாய்கள் குறித்தும் … Read more